Sunday, June 8, 2008

நூறு ரூபாய் நோட்டு...  

நேற்று ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் ஏ.டி.எம்மில் நான் எடுத்த நூறு ரூபாய் நோட்டை தான் உங்கள் பார்வைக்கு இங்கே கொடுத்துள்ளேன். நான் எடுத்தது மொத்தம் ஐந்தாயுரம் ரூபாய் (வீட்டு வாடகை மற்றும் இதர செலவுகளுக்காக) . எண்ணி மட்டும் பார்த்தேன் ஐம்பது நோட்டு இருக்கிறதா என்று. ஒவ்வொரு நோட்டையும் சரிவர செக் செய்யாமல் விட்டதன் விளைவு இப்பொழுது ப்ளாக்கில் பொலம்பும் படி ஆகிவிட்டது.

இது முழுக்க முழுக்க வங்கியின் தவறு. சரிவர செக் செய்யாமல் ஏ.டி.எம் இயந்திரத்தில் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை போடுகிறார்கள். இதை யாரிடம் முறையிடுவதென்று இந்த முன்னேறிய தகவல் தொழில்நுட்ப உலகத்தில் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படியே புகார் கூறினாலும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஏ.டி.எம்மில் தான் அந்த நூறு ரூபாய் தாள் எடுக்கப்பட்டது என்பதற்கு நான் எதை சாட்சியாக கூற முடியும் ? எனக்கு ஒரு மண்ணும் புரியவில்லை.

இந்த பிரச்சனையை கையாள எனக்கு உங்கள் ஆலோசனை தேவை நண்பர்களே.. ஹெல்ப் ப்ளீஸ்...

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories