Sunday, November 22, 2009

மொக்கையா.. செம மொக்கையா..  

பொழுது போகாமல் டிவியின் முன்னாடி ஒக்காந்து சேனல் மாத்தி மாத்தி பாத்துக்கிட்டே இருந்தேன் இன்னிக்கு மதியம். இந்த சன் நெட்வொர்க் தொல்ல தாங்க முடியல. அவங்களோட எந்த சேனல தொறந்தாலும் டீலா நோ டீலான்னு அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் விளம்பரங்களை போட்டு வறுத்தெடுத்து கொண்டிருக்கிறார்கள். அதிலும் பாட்டு, ஆட்டம், கண்ணீர் என்று பல மசாலாக்கள்.

வழக்கம் போல இதுவும் சன் நெட்வொர்க்கின் சொந்த ஐடியா இல்லை. கிட்டத்தட்ட லோகோ உட்பட அனைத்தையும் சுட்டுவிட்டார்கள். கிட்டத்தட்ட 75 நாடுகளில் இதன் பல்வேறு வடிவங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் மூலம் dutch காரர்களின் மூளை.

நிகழ்ச்சியை பற்றி சொல்வதற்கு ஒரு மண்ணும் இல்லை. மாடல்களை மொத்தமாக வாடகைக்கு எடுத்து கையில் பெட்டியுடன் ஷோ கேஸ் பொம்மைகள் போல நிற்க வைத்திருக்கிறார்கள். பங்கேற்பாளர் சொல்லும் பெட்டியை திறக்கும் மிக கடினமான வேலை அவர்களுக்கு.

தொகுப்பாளர் ரிஷி பாவம், சோனி டிவியின் Dus ka dum இல் சல்மான் கான் செய்யும் மேனரிசங்களை அப்படியே காப்பி அடிக்கிறார். சட்டையை கழட்டுவது மட்டும் தான் பாக்கி. பெருங்குரலெடுத்து சில நேரங்களில் ஓலமிடுகிறார், குரங்கு சேட்டை செய்கிறார். இவரை மாற்றி விட்டு ஒரு பெரிய ஸ்டாரை போட்டால் ஷோ பிக் அப் ஆக வாய்ப்பிருக்கிறது. கோடீஸ்வரன் நிகழ்ச்சியே எவ்வளவோ பரவாயில்லை. சரத் குமார் மிக அருமையாக தொகுத்திருந்தார். அவர் மாதிரி ஒரு சினிமா நட்சத்திரம் இருந்தால் நிகழ்ச்சி தப்பும் இல்லையேல் கூடிய சீக்கிரம் விளம்பரதாரர்கள் ஜகா வாங்கிவிடுவார்கள்.

இதுல பேங்கர் வேற. அது யாரு கலாநிதியா?.

வர வர சன் டிவியின் அட்டூழியம் தாங்க முடியல. அவர்களின் சொந்த பட விளம்பரங்களை அவர்களின் சொந்த டிவியில் வேறு விளம்பரதாரர்கள் பணத்தில் ஒளிபரப்புகிறார்கள். உதாரணம் : Ponds white beauty கண்டேன் காதலை விளம்பரங்களை சன் டிவியில் ஒளிபரப்புவது. இரட்டை வருமானம் சன் டிவிக்கு.

இனி அடுத்தடுத்து வரும் அவர்களின் படங்களில் ஹீரோயின் நிச்சயம் எதாவது ஒரு க்ரீமோ, பல்பொடியோ, அல்லது தொடப்ப கட்டையோ வாங்குவது மாதிரி காட்சி நிச்சயம் வரும். ஏன்னா இரட்டை வருமானம் பாத்து பழகினவங்க சும்மா இருக்க மாட்டாங்க. எந்திரனில் ரஜினி எதாவது ஒரு சோப்பு பேரை சொல்லி நிச்சயம் கேப்பாரு பாருங்க. ரஜினியின் தீவிர ரசிகர்கள் சோப்பை மாற்ற இப்போதே தயாராக இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பின் குறிப்பு : மேலே உள்ள இரண்டு படங்களும் இந்த நிகழ்ச்சியின் வேறு நாட்டு வெர்சன் படங்கள். ஏதாவது வித்தியாசம் தெரியுதா உங்களுக்கு?. எவ்வளவு தெளிவா சுட்டிருக்காங்கன்னு பாருங்க மக்களே.

ஓட்டு போடுங்க, போடாதவர்களுக்கு கண்டேன் காதலை படத்தின் விளம்பரங்கள் தொடர்ந்து நாலு நாள் அவங்க வீட்டு எந்த சேனலை தொறந்தாலும் வரக்கடவது.

Wednesday, November 11, 2009

ஈழம் - நம் மௌனம் - தாய்ப்பாலில் நஞ்சு.  


நமது ரத்த சொந்தங்கள் படும் துயரத்தை உலகுக்கு பறைசாற்றும் புத்தக வெளியீடு. பல பிரபலங்கள் இப்புத்தகத்தில் ஈழம் பற்றிய தங்களின் உணர்வுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஈழத்தின் உண்மை நிலையை உலகுக்கு எடுத்துக்காட்டும் நிழல்படங்கள் இப்புத்தகத்தில் முக்கிய இடம் வகிக்கிறது.

அனைத்திந்திய ஊடகங்கள் உற்று நோக்கும் வரலாற்று நிகழ்வு இது, ஆகவே பெருந்திரளாக கலந்துகொண்டு நமதுணர்வை வெளிப்படுத்துவோம்.

அனுமதி இலவசம். அனைவரும் வருக.

Saturday, November 7, 2009

கமல் ஹாசர்-55-வாழ்த்து மடல்.  

உலக நாயகனின் 55 ஆவது பிறந்த நாள் இன்று. அவர் பல்லாண்டு வாழ்ந்து மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள். இந்த இனிய நேரத்தில் அவருக்கு என்னால் இயன்ற ஒரு வாழ்த்து மடல் கீழே.

களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகமான பிஞ்சு நீ
ரசிகர்களின் நெஞ்சில் எப்போதும் நீ..

மூன்றாம் பிறையில் முத்திரை பதித்து
ஆயிரம் பிறை கண்ட அபூர்வ முத்தே..

சலங்கை ஒலியினிலே ரசிகனை மயக்கிய மயக்க மருந்தே
உன் நினைவிலே வாழும் ரசிகனுக்கு என்றென்றும் நீ ஒரு விருந்தே..


நாயகனில் நாயகனே
நீதான் கன்னிகளின் கனவு நாயகனே..

குள்ளமாய் தோன்றி உள்ளம் கவர்ந்த அபூர்வ சகோதரனே
உனக்கு ஏது ஈடு இணையே..

தேவர் மகனில் நீ சிவாஜியின் மகன்
ஆனால் நிஜத்திலோ நீ தமிழகத்தின் தலை மகன்..

இந்தியனில் நீ தாத்தா
உன் இதயத்தை தமிழனுக்கு தா தா..

ஹே ராமில் நீ காந்தி தாசன் ஆனாய்
தமிழர்கள் கமல் தாசன் ஆனார்கள்..

நீ தெனாலி
தமிழர்களின் பங்காளி..

சினிமாவில் பகுத்தறிவை விதைக்கும் சண்டியன் நீ
தமிழனை தலை நிமிர்த்திய இண்டியனும் நீ..

வசூல் வேட்டை நடத்தும் வசூல் ராஜா நீ
டாக்டர் பட்டம் பெற்ற சிரிப்பு வைத்தியன் நீ..

வேட்டையாடி விளையாடிய சிங்கமே
உன்னை மறந்தால் தமிழனுக்கு அசிங்கமே..

கமல் = சிவாஜி + 1 என்று புது கணக்கை போட்ட புலியே
தசாவதாரம் முன்னாள் மற்ற படங்கள் எலியே..

நம்மைபோல் ஒருவனாய் சீரிய சிறுத்தையே
தமிழன் தொடர்வான் உன் கருத்தையே..

நீ செய்தாய் உடல் தானம்
மற்றவர்களுக்கு நீ என்றுமே முன்னுதாரணம்..

தமிழனுக்கு நீ கற்றுக்கொடுத்தாய் முத்தம்
அதை செவ்வனே செய்வான் உன் ரசிகன் நித்தம்..

எல்டாம்ஸ் ரோட்டின் பெயர் மாற்றம் எல்லாம் கம்மி
தமிழ்நாட்டையே கமல்நாடக்கினால் நன்றியுரைப்பேன் நெஞ்சு விம்மி..

உலக நாயகனே
இனியும் நீ சாதிக்க ஏதுமுண்டா?..

உன் சாதனைகள் முன்னாள் இமயம் குள்ளம்
வாழ்க உன் உயர்ந்த உள்ளம்..

வாழ்க நீ பல்லாண்டு
ரசிகர்களின் உள்ளத்தை எப்போதும் ஆண்டு..

கமெண்ட்ஸ் ப்ளீஸ். பிடிச்சிருந்தா ஓட்டும் போடுங்க. நன்றி.

Tuesday, October 27, 2009

சாதனை படைத்த விஜய் டிவி - கமல் 50 விழா  

The month-long festivities conducted by Vijay TV in lieu with the completion of 50 years of Padmashree Dr. Kamal Haasan in Indian cinema culminated in a fitting finale. The grand event attended by the biggest names of South Indian Cinema was aired as a two part series on October 12th and 13th on the channel.

As part of the festivities, Vijay TV had plied a customized bus titled “Kamal Express” which traversed across the state featuring a photo exhibition of some of Kamal Haasan’s rare photographs. A literary event talking about Kamal Haasan’s passion for the Tamil language and a musical nite featuring two legends SP Balasubramanyam and Chitra performing Kamal’s greatest love songs were also featured.

The event was both an emotional and memorable one as the two big names of Tamil Cinema ‘Ulaganayagan’ Kamal Haasan and ‘Super star’ Rajinikanth were seated side by side revealing to the world that they are indeed best of friends. The presence of the other stalwarts of South Indian cinema like Mohanlal, Mamooty, Venkatesh, AR Rahman and Ilayaraja only added to the glitterati. The event was much awaited for both among his millions of fans and the industry.

The channel aired the property on October 12th and 13th on primetime breaking away from the regular schedule was witnessed by over 60 lakh people across the country. Vijay TV garnered a channel share of 40% in Chennai among the female audience overtaking the market leader in that time band (source: TAM; CS F 15+ABC, Chennai, Wk 42 Mon-Tue 1900-2300hrs). Vijay TV’s GRPs jumped to a whopping 346 GRPs from last week’s 193 in Tamilnadu (source: TAM, Trends by date; 30 min daypart, CS ABC 4+, Tamilnadu, All day). The event touched a peak TVR of 22.6 in Chennai (among females).

K. Sriram, General manager – Vijay TV says “This was easily one of the biggest events were witnessed in South India; and I am extremely proud of my team which had put together a show of this Magnitude in a very short span of time. And of course a special thanks to Mr. Kamal Haasan who was inspiration enough for us to deliver such an event . We had planned to schedule this event on a weekday breaking away from our regular schedule and it surely has worked” .

Source

Sunday, October 4, 2009

ரஜினிகாந்தின் முயற்சியால்தான் பூமி சூரியனை சுற்றிவருகிறது--நாசா திடீர் அறிவிப்பு.  

Outer space exists because it's afraid to be on the same planet with Rajnikanth

Rajnikanth has counted to infinity--twice.

When
Rajnikanth does a pushup. He isn't lifting himself up, he's pushing earth down.

Rajnikanth is so fast, he can run around the world and punch himself in the back of his head.

Rajnikanth doesn't wear a watch, HE decides what time it is.

Rajnikanth can slam a revolving door.

Rajnikanth gave Mona Lisa that smile.

Rajnikanth's house has no doors, only walls that he walks through.

Rajnikanth grinds his coffee with his teeth and boils the water with his own rage.

If you Google Search '
Rajnikanth getting kicked'. you will generate zero results. It just doesn't happen.

It takes
Rajnikanth 20 minutes to watch 60 Minutes.

The Bermuda Triangle used to be the Bermuda Square, until
Rajnikanth kicked one of the corners off.

There are no weapons of mass destruction in Iraq;
Rajnikanth lives in Chennai.

Rajnikanth once ate and entire bottle of sleeping pills. They made him blink.

The only things that run faster and longer than
Rajnikanth are his films.

Rajnikanth's every step creates a mini whirlwind. Hurricane Katrina was the result of a morning jog.

Where there is a will, there is a way. Where there is
Rajnikanth, there is no other way.

பி.கு : தலைப்பை தவிர மற்றது என் சொந்த சரக்கல்ல, இந்த பதிவு யாரையும் புண்படுத்தவும் அல்ல. சிரிக்க மட்டுமே.

கமெண்ட்ஸ் ப்ளீஸ். பிடிச்சிருந்தா ஓட்டும் போடுங்க. நன்றி.

Friday, October 2, 2009

கமல்-50 விழா - குசும்பு - பகுதி 1.  

சமீபத்தில் விஜய் டிவியின் சார்பில் நடந்த கமல் - 50 விழாவில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் அமைந்துள்ள கீழே உள்ள புகைப்படங்களை பாருங்கள். படங்களை பெரிதாக பார்க்க அதன் மேல் கிளிக் செய்யவும். நகைச்சுவை ஒன்றே நோக்கம். பகுதி 2 விரைவில்.

கமெண்ட்ஸ் ப்ளீஸ். பிடிச்சிருந்தா ஓட்டும் போடுங்க. நன்றி.

Monday, September 28, 2009

நிஜ வேட்டைக்காரன் விஜய் ஆண்டனி.  

விஜய் ஆண்டனியின் ஒவ்வொரு ஆல்பமும் பிரம்மிக்க வைக்கிறது. சாருக்கு நிஜமாவே சரக்கு இருக்கு. ஹாரிஸ் ஜெயராஜ் ஒரே மாதிரி பாடல்களையும், ரஹ்மானுக்கு படங்களே இல்லாமலும் இருக்கும் இந்த நேரத்தில் விஜய் ஆண்டனி ஒவ்வொரு பாடலுக்கும் நல்ல வித்யாசம் காட்டுகிறார். இப்போதைக்கு இவர் தான் தமிழின் நம்பர்-1 இசையமைப்பாளர்.

நேற்று வேட்டைக்காரன் பாடல்களை கேட்டேன். இன்று மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.

முதல் பாடல், என் உச்சிமண்டைல சுர்ருங்குது ........
அண்ணாமலை எழுதியுள்ள பாடலை பாடியுள்ளவர்கள் கிருஷ்ணா அய்யரும் ஷோபா சேகரும். ரசிக்க வைக்கும் பாடல். மந்திரக்காரா மாய மந்திரக்காரா வரியில் ஏதோ ஒரு இனம் புரியாத சுகம்.

ரெண்டாவது பாடல், கரிகாலன் கால போல ........
கபிலன் எழுதியுள்ள பாடலை பாடியுள்ளவர்கள் சுர்ஜித்தும் சங்கீதாவும். சூப்பர் பாட்டு. தெம்மாங்கு பாடல் போல இடையிடையில் வரும் இசையும் வரிகளும் புல்லரிக்க வைக்கிறது.

மூன்றாவது பாடல், நான் அடிச்சா தாங்க மாட்டே ........
விஜயின் அறிமுக பாடல் இது. கபிலன் எழுதி ஷங்கர் மகாதேவன் பாடியுள்ளார். இந்த ஆண்டில் பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்க போகும் குத்து பாடல் இது தான். நல்லா சவுண்ட் வெச்சு கேக்கும் போது, கால்கள் தானாக ஆடுவதை தவிர்க்க முடியாது. விஜய் ரசிகர்கள் திரையரங்கில் நிச்சயம் குத்தாட்டம் போடலாம்.

நாளாவது பாடல், ஒரு சின்ன தாமரை ........
விவேகா எழுதி கிரிஷ்-உம் சுசித்ராவும் பாடியுள்ளனர். மெலடி ரகம் இது. நல்ல இனிமையான பாடல். இசையும் வரிகளும் அருமை. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.

ஐந்தாவது பாடல், புலி உறுமுது ........
கபிலன் எழுதி அனந்து மற்றும் மகேஷ் விநாயகமும் பாடியுள்ளனர். விஜய் வில்லன்களை பலி வாங்க போகும் போது வரும் பாடல் என்று யூகிக்க முடிகிறது. கேட்கும் படியாக உள்ளது.

மொத்தத்தில் அனைத்து பாடல்களும் தெளிவாக புரிகிறது மிக எளிதாக. ரசிக்கும் படியான பாடல்களை கொடுத்திருக்கும் விஜய் ஆண்டனிக்கு வாழ்த்துக்கள். குறை சொல்ல முடியாத நல்ல ஆல்பம். தாராளமாக கேளுங்கள்.

விஜய் ஆண்டனி தான் நிஜ வேட்டைக்காரன். ரசிகர்களின் மனங்களை வேட்டையாடுவார் நிச்சயமாக.

கமெண்ட்ஸ் ப்ளீஸ். பிடிச்சிருந்தா ஓட்டும் போடுங்க. நன்றி.

Sunday, September 27, 2009

2045-ல் தமிழக முதல்வர் யார் ?.  

அடுத்த வாரிசு ரெடி. ஸ்டாலினின் பேரன் இன்பநிதி இப்பொழுதே கும்பிட ட்ரைனிங் எடுத்து கொண்டிருக்கிறார். யாருக்கு தெரியும் 2045 -ல் தமிழக முதலமைச்சர் இவராக கூட இருக்கலாம். அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இன்பநிதி தலைமையில் வாண்டுகள் அணியை உருவாக்க இனமான பேராசிரியர் தலைமையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் முன்னிலையில் நேற்று அறிவாலயத்தில் நடந்த தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புகைப்படம் நன்றி : குமுதம்
கமெண்ட்ஸ் ப்ளீஸ். பிடிச்சிருந்தா ஓட்டும் போடுங்க. நன்றி.

Friday, September 18, 2009

நம்மைப்போல் ஒருவன்.  


எங்காவது எப்போதாவது வெடிகுண்டு வெடித்தால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?
எங்காவது எப்போதாவது தீவிரவாத தாக்குதலால் யாராவது மரணமடைந்தால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?
எங்காவது எப்போதாவது அநீதி நடந்ததை அறிந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
எங்காவது எப்போதாவது மத சண்டை குறித்த செய்தியை அறிந்தால் நீங்கள் என்ன எண்ணுவீர்கள்?

இந்த கேள்விக்கெல்லாம் பதிலாக உங்களிடம் ஒருவித இனம் புரியாத கோபமும் படபடப்பும் இருக்குமானால் நீங்களும் என்னைப்போல் ஒருவன், கமலும் நம்மைபோல் ஒருவன்.

தமிழ் சினிமாவின் சராசரி பார்முலாக்களை உடைத்தெறிந்த படம் உன்னைப்போல் ஒருவன். நாலு பாட்டு, ஐந்து சண்டை, ஆறு காமெடி ட்ராக், ஏழு முறை தொப்புள் என்று தமிழனை சிக்க வைத்த படங்களுக்கு மத்தியில் இந்த படத்தை சொந்த காசு போட்டு ரீமேக் செய்திருக்கும் கமலுக்கு முதலில் ஒரு சபாஷ். கமலும் மசாலா படங்கள் பல உருவாக்கியிருந்தாலும் இப்போது கமல் போகும் பாதை சரியாக மிக தெளிவாக தெரிகிறது.

கதை சுருக்கம் என்னவென்றால் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் துறை அதிகாரியான மோகன்லாலை மிரட்டி பல்வேறு குற்றங்களை செய்த பயங்கர தீவிரவாதிகளை சிறையில் இருந்து விடுவித்து அவர்களை கமல் என்ன செய்கிறார் என்பது தான். படம் 110 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் சொல்லவந்ததை நச்சென்று சொல்லியிருகிறார்கள் எந்த வித தொய்வுமின்றி.

இந்த படம் ஒரிஜினல் படத்தில் இருந்து வேறுபடுகிறது கமலால், மோகன்லாலால். இருவரும் போட்டி போட்டுகொண்டு நடித்திருக்கிறார்கள். கமல் ஒரே உடையில் ஒரே இடத்தில இருந்து பல வித உணர்ச்சிகளை கொட்டியிருக்கிறார். கமலுக்கு இணையான கம்பீரம் மோகன்லாலின் நடிப்பிலும். மோகன்லால் நிஜ போலீஸ் போலவே இருக்கிறார் சிறிது தொப்பையுடன். கமலும் ஒரு சாமானியன் போலவே இருக்கிறார் சிறிது தொப்பையுடன். காவல் அதிகாரி வேடத்தில் வரும் கணேஷ் வெங்கட்ராம் படத்துக்கு ஒருவித புத்துணர்ச்சியை கொடுக்கிறார்.

இந்த படத்தில் கலைஞரின் பங்களிப்பும் இருக்கிறது, முதலமைச்சர் பாத்திரத்தில் கலைஞர் குரல் நடித்திருக்கிறது. படத்துக்கு மிகப்பெரிய பலம் வசனங்கள் தான், இரா.முருகனுக்கு வாழ்த்துக்கள். வசனம் ஒவ்வொன்றும் நடு மண்டையில் ஆணி அடித்த உணர்வையும் வலியையும் உண்டாக்குகிறது. எல்லா வசனங்களிலும் ஒருவித கம்பீரமும் நகைச்சுவையும் கலந்தே வருகிறது.

பின்னணி இசை படத்தின் காட்சிக்கு தக்கபடி கச்சிதமாக கூடவே வருகிறது. ஆங்கில படம் பார்க்கும் உணர்வை இசையின் மூலம் வரவழைத்து விட்டார் ஸ்ருதி.

ஒளிப்பதிவு பிரம்மாண்டம், இயக்கம் கட்டுக்கோப்பு.

இது சாமானியனை பற்றிய படமாய் இருப்பினும், ஆங்கில கலப்பு அதிகம் இருப்பதால் பல சாமானியர்களுக்கு புரிவது சிரமம். மற்றபடி என்னைப்பொறுத்த வரையில் இந்த படம் தமிழ் சினிமாவின் ஒரு மைல் கல். வணிக ரீதியாகவும் கமலை கைதூக்கி விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரிஜினல் படத்தை பல முறை பார்த்தவர்கள் கூட இன்னொரு முறை தாராளமாக பார்க்கலாம், நிச்சயம் உங்கள் எதிர்பார்ப்பு வீணாகாது.

Saturday, August 22, 2009

நொந்த சாமி.  


தமிழ் சினிமாவுக்கு இது போதாத காலம். அதிகம் செலவு செய்யப்பட்ட படங்கள் அடி வாங்குவது வாடிக்கை ஆகிவிட்டது, அந்த வரிசையில் இதோ கந்தசாமியும். ஓவர் ஹைப் ஒடம்புக்கு ஆகாது, என்னா பில்ட் அப் குடுத்தாங்க.

கதை சுருக்கம் என்னவென்றால் அநியாயமாக பணம் சேர்த்தவர்களிடம்
கொள்ளை அடித்து இல்லாதவர்களுக்கு கொடுப்பது. கிட்டத்தட்ட ஜென்டில் மேன் கதை மாதிரி தான். திருப்போரூர் முருகன் கோவிலில் மக்கள் தங்கள் குறைகளை எழுதி ஒரு மரத்தில் கட்டினால் அவற்றை CBI அதிகாரியான ஹீரோ நிறைவேற்றுகிறார். எப்படி என்பது தான் கதை.

படம் ரொம்ப ரொம்ப நீளம் கிட்டத்தட்ட
மூன்றரை மணி நேரம். இந்த படத்துக்கு எடிட்டர் இருந்தாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது. படத்தின் நீளத்தை குறைத்திருந்தால் கொஞ்சம் விறுவிறுப்பு கூட்டியிருக்கலாம்.

அடுத்து வடிவேலு, பொதுவாக இவர்
திரையில் வந்தாலே மக்கள் கைதட்டி சிரிப்பார்கள். ஆனால் இந்த முறை வடிவேலு மக்களுக்கு அந்த வேலையே கொடுக்கவேயில்லை. படத்தின் இடையிடையே வந்து காமெடி என்ற பெயரால் மக்களை கொடுமை படுத்துகிறார். ஒரு சில காட்சிகளை தவிர மற்ற எல்லாம் குப்பை. ஓவர் நைட்ல ஒபாமா டயலாக் சூப்பர். வடிவேலுவுக்கு சரக்கு தீர்ந்து போய்விட்டது.

அப்புறமா எதுக்கெடுத்தாலும் ஓவர் பில்ட் அப் கொடுக்கிறாங்க. விக்ரமை
கொல்ல ரொம்ப தூரம் ஹெலிகாப்டரில் கூட்டி போவது ஒரு உதாரணம். அதே மாதிரி சண்டை காட்சிகள் வேஸ்ட். விக்ரமின் கண்ணை கட்டி விட்டு வில்லன் வகையறாக்கள் ஷூவை கழட்டி வைத்து சத்தம் வராமல் சண்டை போடுவது ரொம்ப பழைய காலத்து சீன். அதே மாதிரி கண்ணை கட்டி விட்டு டப்புன்னு சுட்டா முடியற மேட்டருக்கு ரொம்ப இழுக்கிறார்கள். சண்டை காட்சிகளின் போது முருகா முருகா என்று பின்னணி சவுண்ட் விட்டு மாரியம்மா படம் பார்க்கும் எபெக்ட் கொடுக்கிறார்கள். அது பெண்களை கவர என்று நினைக்கிறேன்.

விக்ரம் அவர் வேலையே கச்சிதமாக
முடித்திருக்கிறார். அதிகம் நடிக்க வாய்ப்பில்லை இந்த படத்தில் அவருக்கு. பல வேஷங்கள் இந்த படத்தில் இருந்தாலும் எதற்கு அப்படி செய்கிறார் என்றால் சரியான காரணம் இல்லை. சில இடங்களில் மணிரத்னத்தின் ராவணன் கெட்டப்பில் வருவது போல எனக்கு தோன்றுகிறது. பல வருஷம் ஒரே படத்தை எடுத்தால் இப்படித்தான் ஆகும். ஸ்ரேயா பிட் துணிகளுடன் திறமையை முழுதாக 'காட்டியிருக்கிறார்'. கழுத்து எலும்பெல்லாம் தெரிகிறது. கஷ்ட பட்டு நடிச்சு நல்ல சோறு கூட சாப்பிடலேன்னா எப்படி ஸ்ரேயா. இப்படியே போனால் உங்களை ஹீரோக்கள் கட்டி பிடித்தால் எலும்பு குத்தும் நாள் ரொம்ப தூரம் இல்லை.

இன்னொரு காமெடி என்னன்னா படத்தில் வரும் எல்லாரும் விக்ரமுக்கு உதவி
செய்கிறார்கள். CBI பெரிய ஆபிசர் முதல் எல்லாரும் இவருக்கு உதவி செய்கிறார்கள். பம்பர கண்ணாலே பாட்டுக்கு ஆடும் முமைத் கான் கூட விக்ரமின் ஆளோ என்று எனக்கு ஒரு நிமிடம் தோன்றியபோது சிரிப்பை அடக்க முடியவில்லை. முமைத் கான் அந்த பாட்டுக்கு ஆட வில்லன் முப்பது லட்சம் கொடுத்தாக சொல்கிறார். அதுவும் கூட பில்ட் அப் தான். பெரிய பட்ஜெட் படம்தானே என்று அள்ளி விடுகிறார்கள்.

பாடல்கள் சூப்பர். ஆனாலும் தேவையில்லாமல் அடிக்கடி வருகிறதோ என்று
தோன்றுகிறது. பின்னணி இசை சுமார் ரகம். ஒளிப்பதிவு சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை. ஐநாக்ஸ்ல தான் படம் பார்த்தேன் ஆனாலும் திருட்டு VCD பார்ப்பது மாதிரி இருந்தது சில நேரங்களில். அது திரை அரங்கின் குறையா அல்லது ஒளிப்பதிவே அப்படியா என்று எனக்கு பெருங்குழப்பம்.

பிரபு போலீஸ் அதிகாரியாக தன் வேலையே கச்சிதமாக செய்திருக்கிறார். வில்லன் இந்திரஜித்தும் பரவாயில்லை. பம்பர கண்ணாலே பாட்டு முடிவில்
வில்லனை அரைகுறையாக மக்கள் மத்தியில் நிற்க வைத்து விக்ரம் வீர வசனம் பேசுவது ரொம்ப காமெடி. இன்னொரு வில்லன் ஆஷிஷ் வித்யார்த்தி, சொல்லிக்கொள்ளும் படியாக ஒன்றும் இல்லை. மற்றுமொரு வில்லன் அலெக்ஸ் பரவாயில்லை.

படம் முழுக்க இன்னொருவர் மெயின் ரோல் பண்ணியிருக்கிறார். அவர் சேவல் தான். விக்ரமின் சேவல் கெட்டப்புக்கு இறகு கொடுப்பது முதல் பல வேலை சேவலுக்கு இந்த படத்தில். விக்ரமின் கூடாரத்தில் போலீஸ் அதிகாரியான பிரபு நுழையும்போது சில சேவல்கள் கட்டி வைக்கப்பட்டிருப்பதை காட்டுவார்கள். கோழி குழம்பின் சுவை என்னை ஆட்கொண்டது அந்நேரத்தில். அவ்வளவு ப்ரீ டைம் கொடுக்கிறார்கள் திரைக்கதையில் கண்டதையும் நினைக்க..

எவ்வளவோ தப்பு செய்தாலும் ஹீரோ கடைசியில் நிரபராதி ஆகி விடுகிறார். கொடுக்கப்பட்ட தண்டனை இன்னொரு காமெடி, அவரை ராஜஸ்தானுக்கு மாற்றி
விடுகிறார்கள். கிளைமாக்ஸ் அந்நியனில் வருவதை போல இருக்கிறது. ராஜஸ்தான் போய் அங்குள்ள கோவிலில் கட்டப்பட்டுள்ள சீட்டுகளை படித்து நிறைவேற்றி கந்தசாமி ஹிந்திசாமி ஆகிவிடுகிறார்.

சுசி கணேசன் தானும் ஒரு நடிகனே என்று ஆஜர் ஆகிவிடுகிறார். நடிக்க வந்த
நேரத்தில் கொஞ்சம் கதையில் கவனம் செலுத்தியிருக்கலாம். கதையில் ஒரு நல்ல செய்தி இருப்பது உண்மை தான், ஆனால் திரைக்கதையில் இன்னும் கவனமாக இருந்திருந்தால் மிக நல்ல படம் கிடைத்திருக்கும். சில காட்சிகளும் வசனங்களும் நன்றாக இருக்கிறது. படம் மிகவும் சுமார் ரகம் தான்.

பி.கு. என் நண்பனை படத்தை பத்தி பில்ட் அப் கொடுத்து கூட்டி போயிருந்தேன். படம் முடித்து செம கடுப்பில் இருந்தான், வெளியே வந்த போது சன் கிளாஸ் கடையை பார்த்த உடன் அவன் முகத்தில் பல்பு எரித்து. உனக்கு இது சூப்பரா இருக்கும்டான்னு என்னை ஏத்தி விட்டு அதை வாங்க வைத்து பழி தீர்த்து கொண்டான். படத்துடன் சேர்த்து தண்ட செலவுகள பல எனக்கு ஒரே நாளில்....

Tuesday, June 2, 2009

மீண்டும் நான்..  

இந்த ஆண்டு பாதி கடந்த நிலையில் முதல் பதிவு எழுத இப்பொழுதான் நல்ல நேரம் வந்திருக்கிறது. நீண்ட இடைவேளைக்கு காரணம் வேலைப்பளு மற்றும் சரக்கு பற்றாக்குறை.

இந்த இடைவேளையில் எவ்வளவோ மாற்றங்கள், மர்மங்கள் தமிழகத்தில். அதில் சில அரசியல் நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கவை.

1. தி.மு.க கூட்டணியின் வெற்றி : எதிர்பாராத வெற்றி. நான் எதிர் பார்த்த வரையில் 50-50 என்று தான் தோன்றியது. ஆனால் முடிவு எதிராக அமைந்து நிலையான ஆட்சி அமைந்தது மிக நல்ல விஷயம். தி.மு.க செய்த பல கவர்ச்சி கரமான பணிகள் அதன் வெற்றிக்கு காரணம் மற்றும் பண விசயத்தில் தாராளம் காட்டியதும் வெற்றிக்கு ஒரு காரணம் குறிப்பாக மதுரையில். விவசாயிகளின் நண்பன் வெற்றி பெற்றதில் என் பெற்றோருக்கு மகிழ்ச்சி, எனக்கும் தான். இலவச மின்சாரம், உழவர் சந்தை, கடன் தள்ளுபடி போன்ற திட்டங்களால் தான் தி.மு.க வாக்கு வங்கி இன்னமும் சிதையாமல் இருக்கிறது. மின்வெட்டு பிரச்சனை மட்டும் இல்லாமல் இருந்தால் நாற்பதும் கிடைத்திருக்கும்.

2. பா.மா.க வின் தோல்வி : நான் மிகவும் ரசித்த நிகழ்வு இதுதான். அரசியல் நாடோடிகள் இருப்பது நாட்டுக்கு நல்லதில்லை என்று மக்கள் கருதியதாலும், தி.மு.க வின் வெறி கொண்ட உழைப்பினாலும்தான் இது நடந்தது. அரசியலில் அனைவரும் கூட்டணி மாறியவர்கள் தான், ஆனால் ராமதாஸ் அய்யா அளவுக்கு யாரும் செய்ததாக எனக்கு நினைவில்லை. மக்கள் மிக சரியான தண்டனை கொடுத்து விட்டார்கள். இனி வரும் காலங்களில் ராமதாஸ் கொஞ்சமாவது யோசிப்பார். நாங்கள் போகும் கூட்டணி தான் வெற்றி பெரும் என்பது போன்ற சப்பை கட்டு வாதங்கள் வருவது குறையும்.

3. வைகோ தோல்வி : மிகப்பெரிய அதிர்ச்சி. இவர் தோல்வி காட்டுவது என்னவென்றால் உள்ளூர் பிரச்சனைகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்து, எந்நேரமும் இலங்கையை பற்றி பேசியது மக்களுக்கு பிடிக்கவில்லை. அதுவுமில்லாமல் இவர் அடிமை போல அம்மையாரிடம் இருப்பது அவர் கட்சி தொண்டர்களே ரசிக்காத ஒன்று. நாலுக்கே நாற்பது சுற்று பேசியவர் இவர். ராமதாஸ் அளவுக்கு கூட இவர் பெறாதது ம.தி.மு.க வின் எதிர்காலத்துக்கு நல்லதில்லை. பேசாமல் கட்சியை கலைத்து விட்டு அம்மையாரிடம் ஐக்கியமாக்கிவிடுவது இவர் எதிர்காலத்துக்கு நல்லது.

4. கொங்குநாடு முன்னேற்ற பேரவையின் எழுச்சி : கட்சி ஆரம்பித்த இரண்டு மாதத்திலேயே சுமார் ஆறு லட்சம் (போட்டியிட்ட 12 தொகுதிகளில்), அதாவது இரண்டு சதவிகிதம் வாக்குகளை பெற்றிருப்பது மிகப்பெரிய சாதனை. கோவை, ஈரோடு, பொள்ளாச்சி, திருப்பூர் போன்ற தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஓட்டு வாங்கி தி.மு.க கூட்டணியின் தோல்விக்கு காரணமாக அமைந்ததும் குறிப்பிடத்தக்க சாதனை. கள்ளுக்கு அனுமதி பெறுவது, வன்கொடுமை சட்டத்தை கைவிடுவது ஆகியன இவர்களின் முக்கிய கோரிக்கைகள். இந்த கட்சிக்கு கொங்கு மண்டலத்தில் மிகப்பெரிய எதிர் காலம் இருக்கிறது. இவர்கள் இல்லாமல் எந்த கட்சியும் வெற்றி பெற முடியாத நிலை எங்கள் மண்டலத்தில் வரும் காலம் தொலைவில் இல்லை. அடுத்த சட்ட மன்ற தேர்தலில் இவர்களுடன் கூட்டணி அமைக்க பெரிய கட்சிகள் போட்டி போடப்போவது நிதர்சனமான உண்மை. என் உறவினர்கள் பலர் இந்த கட்சியில் ஐக்கியமாக மிக முக்கிய காரணம் வன்கொடுமை சட்டம் குறித்த கொள்கை.

5. E.V.K.S.இளங்கோவன் தோல்வி : எங்கள் தொகுதியில் இளங்கோவன் தோற்றது எதிர்பார்த்த ஒன்று தான். கணேச மூர்த்தி பல தோல்விகளை கண்ட பிறகு ஒரு வெற்றியை பெற்றிருக்கிறார். இளங்கோவன் தோல்விக்கு மிக முக்கிய காரணம் அவர் வாய் தான். நாவடக்கம் இல்லாதவர் எந்த துறையிலும் வெற்றி பெற முடியாது, அதிலும் குறிப்பாக அரசியலில். மின் வெட்டு இவருக்கு எதிராக போனதும் ஒரு காரணம். எனக்கு வருத்தம் என்னவென்றால் இவர் வெற்றி பெற்று மத்திய அமைச்சர் ஆகியிருந்தால் எங்கள் தொகுதிக்கு ஒரு சிறப்பு கரிசனம் காட்டியிருப்பார். ம.தி.மு.க எம்.பி தொகுதிக்கு நல்லது செய்வது என்பது இயலாத காரியம். ஆளும் கட்சியினர் விட மாட்டார்கள். ஆகவே எங்கள் தொகுதியில் ஒரு மண்ணும் மாறாது அடுத்த ஐந்து ஆண்டுக்கு.

6. ராசாவுக்கு I.T : இது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு அறிவிப்பு. ராசாவுக்கு என்ன வெங்காயம் தெரியும் இந்த துறையை பற்றி. தயாநிதி எவ்வளவோ செய்திருப்பார். எல்லாவற்றையும் கனிமொழி லாபி கெடுத்து விட்டது. இருந்தாலும் தயாநிதி செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கிறது டெக்ஸ்டைல் துறையில், குறிப்பாக திருப்பூர் பக்கம் இவர் இத்துறைக்கு மந்திரியானது குறித்து ஒரு மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது நான் கேள்வி பட்ட வரையில். அழகிரி ஏதாவது நல்ல திட்டங்களை அறிவித்து மக்கள் மனதில் இடம் பிடிக்க இது ஒரு நல்ல வாய்ப்பு. பார்ப்போம்.

இன்னும் இருக்கு எழுத, பகுதி இரண்டில் சந்திப்போம்.