Tuesday, September 30, 2008

ஷாருக்கானுக்கு போட்டியாக விஜய் கான்.....  

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு விஜய் கான் என பெயர் சூட்டுவதாக சென்னை திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் இஸ்லாமிய பேரவை என்ற அமைப்பு அறிவித்துள்ளது.

மத்திய சென்னை மாவட்ட தேமுதிக சார்பில் நேற்று இரவு ரம்ஜான் நோண்பு இப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணி செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விஜயகாந்த் நிழ்ச்சியில் நோண்புக் கஞ்சி குடித்தார். பின்னர் பேசுகையில், ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக சர்ச்சுக்கு அருகில் இந்த நோண்பு திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. முஸ்லீம் சமுதாயத்தினர் அனைவரும் நன்கு படித்து வேலைக்குச் செல்ல வேண்டும். அதனால்தான் சமச்சீர் கல்வி வேண்டும் என்று கூறுகிறேன்.

தேமுதிக தேர்தலில் போட்டியிட்டபோது 18 முஸ்லீம்களுக்கு சீட் கொடுத்தேன். அரசியலுக்காக நான் நோண்பு விருந்துக்கு வரவில்லை.

பக்ரீத்துக்கு மட்டன் கொடுத்தேன்

கடந்த பக்ரீத்தின்போது ஏழை முஸ்லீம்களுக்கு மட்டன் கொடுத்தேன். இந்த ஆண்டும் அதிகமாக வழங்கவிருக்கிறேன்.

ஏழைக் குழந்தைகள் கல்விக்காக ஒன்றரை கோடி ரூபாய்க்கு கம்ப்யூட்டர் வாங்கியுள்ளேன். நீங்களும் அதுபோல உதவி செய்யுங்கள்.

நான் எதையும் சொல்ல மாட்டேன். சொன்னால் கண்டிப்பாக செய்வேன் என்றார் விஜயகாந்த்.

நிகழ்ச்சியில் பேசிய திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் இஸ்லாமிய பேரவை தலைவர் முகம்மது பெய்க் பேசுகையில் விஜயகாந்த்துக்கு கேப்டன், புரட்சிக் கலைஞர் என பல பெயர்கள் உள்ளன. எனவே நாங்கள் இன்று அவருக்கு விஜய்கான் என்ற பெயரை சூட்டுகிறோம் என்றார். இதையடுத்து கூட்டத்தில் பலத்த கைத்தட்டல் எழுந்தது.

அதற்குப் பதிலளித்த விஜயகாந்த், எனது மகனுக்கே முஸ்லீம் பெயரைத்தான் வைக்க நினைத்தேன். பிரச்சினை வரும் என்பதால் விட்டு விட்டேன். எனது படங்களில் நடித்தவர்களுக்கு கூட லியாகத் அலிகான், மன்சூர் அலிகான் என பெயரிட்டேன். இப்போது எனக்கு விஜய் கான் என்ற பட்டத்தை கொடுத்துள்ளனர். இதை ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.

பொழக்க தெரிஞ்ச மனுஷன் விஜய் கான்...
Source: Oneindia

Saturday, September 20, 2008

வெர்ஜின் பிடிக்காது எனக்கு, உங்களுக்கு எப்படி ?..  


எப்படி தலைப்பு ? உங்கள உள்ளே வர வெச்சுட்டோம்ள.... 

ஒரு நல்ல மெசேஜ் உள்ள இருக்கறதால இந்த மாதிரி தலைப்பு வெச்சு உங்களை வர வெச்சுட்டேன் அப்படிங்கற வருத்தம் எனக்கு சுத்தமா இல்லை... 

தொடர்ந்து படியுங்க..

வெர்ஜின் மொபைலின் யோ.யோ ப்ளானின் விளம்பரத்தை பார்த்தீர்களா ? இந்த மாதிரி விளம்பரங்கள் ஒரு விதமான சாபக்கேடு. ஒரு புனிதமான சேவையை எவ்வளவு கேவல படுத்த முடியுமோ அவ்வளவு படுத்தி இருக்கிறார்கள். இதை பிரகாஷ் வர்மா என்பவர் நிர்வாணா (சூப்பர் பேரு !) நிறுவனத்தின் சார்பில் இயக்கியிருக்கிறார். 

என்ன கான்செப்ட்னா......... 

ஒரு வாலிபன் கையில் கட்டுடன் ஹாஸ்பிடல் படுக்கையில் படுத்திருக்கிறான். ஒரு நர்ஸ் உள்ளே வருகிறார். அப்பொழுது அந்த பையனின் செல்போன் அடிக்கிறது. கையில் கட்டு போட்டிருப்பதால் அந்த நர்ஸ் ஐ உதவிக்கு அழைக்கிறான். செல்போன் முதலில் ஒரு பான்ட் பாக்கெட்டில் இருப்பதாக சொல்கிறான், நர்சும் உள்ளே கையை விட்டு பார்த்து இல்லை என்று சொல்கிறார். இவனோ இல்ல இல்ல போன் இன்னொரு பாக்கெட்டில் இருப்பதாக சொல்கிறான். நர்சும் இன்னொரு பாக்கெட்டிலும் கையை விட்டு இல்லை என்று சொல்லி விட்டு போய் விடுகிறார். 

அவர் போன பின்பு கையில் ஒளித்து வைத்திருந்த போனை எடுத்து நண்பனிடம் நம்மோட ஐடியா வொர்க் அவுட் ஆயிருச்சுன்னு சொல்லி சிரித்தபடியே பேசுகிறான். அந்த வாலிபனின் ஒரே குறிக்கோள் அந்த நர்ஸ் அவனுடைய பான்ட் பாக்கெட்டில் கையை விட வேண்டும் என்பது தான். என்னே ஒரு உயர்ந்த எண்ணம்...

நர்ஸ் தொழில் ஒரு மிகப்பெரிய சேவை என்று வசனம் பேசிக்கொண்டே இந்த மாதிரி சீரழிவுகளை எளிதில் அனுமதித்து விடுகிறார்கள். விளம்பரம் ஹிட் ஆகவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுக்காக இந்த மாதிரி விளம்பரம் எடுத்த இயக்குனருக்கு என் பலத்த கண்டனங்கள். விளம்பரம் எடுப்பவர்களுக்கும் ஒரு வித சமூக பொறுப்புணர்வு வேண்டும். ஏன் என்றால் விளம்பரங்களின் ரீச் அப்படி. பட்டி தொட்டியெல்லாம் பார்க்கிறார்கள். அந்த அக்கறை வேண்டும் இயக்குனருக்கு. 

இதே விளம்பரத்தை அடிக்கடி ஒளிபரப்பும் போது அதை பார்க்கும் வாலிபர்கள் நர்ஸ்களை தவறான நோக்கத்துடன் பார்க்க வாய்ப்பிருக்கிறது. இந்த மாதிரி எடுப்பதற்கு பதிலாக நர்ஸ்களை அம்மாவுக்கு இணையாக காட்டுவது போல காட்டியிருந்தால் பார்ப்போர் மனதில் ஒரு வித நல்ல மாற்றங்கள் நிகழலாம். நிகழாவிட்டாலும் ஒண்ணும் பாதிப்பு இல்லை.. ஆனால் இந்த தவறான விளம்பரத்தால் எவனோ ஒருத்தன் நர்சை தவறாக பார்த்தாலோ, நினைத்தாலோ, அல்லது ஏதாவது செய்தாலோ அதற்கு அந்த இயக்குனர் தான் பொறுப்பு..

மகளிர் அமைப்புகளே, செவிலியர் அமைப்புகளே விழித்து கொள்ளுங்கள். விளம்பரத்தை தடை செய்ய இணைந்து போராடுவோம்.........

விளம்பரத்தை பார்க்க விரும்புபவர்கள் இங்கே க்ளிக்கவும்.

Friday, September 19, 2008

தினமும் ரெண்டு குட்டி.. பின்னி பெடலேடுத்த பிடெல் காஸ்ட்ரோ...  

கியூபாவின் முன்னால் அதிபர் பிடெல் காஸ்ட்ரோ எண்பத்து இரண்டு வயதை தாண்டி வாழ்ந்து வரும் ரகசியம் என்னவென்றால் அவர் தன் வாழ்நாளில் முப்பத்து ஐந்தாயிரம் பெண்களுடன் தூங்கினாராம் ( டீசண்டா சொன்னா தூங்கினார் அப்படி வேண்டான்னா படுத்தார்)..

அவருக்கு மதியம் ஒரு குட்டியும், நைட் ஒரு குட்டியும் அவசியமாம்.. ரொம்ப மூடு வந்தா காலைலயும் ஒண்ணு வேணுமாம்.. என்ன ஆளுயா அவரு.. ஒடம்புல ஊத்து ஊறிகிட்டே இருந்திருக்கும் போல.. சாப்படற சாப்பாடு எல்லாம் அதுலேயே போயிருமே.. இந்த உலகின் நிஜ மன்மத ராசா இவர் தான்..

எனக்கொரு சந்தேகம் உடலுறவு கொள்வதை ஆங்கிலத்தில் ஸ்லீபிங் என்று ஏன் அழைக்கிறார்கள் ? உடலுறவுக்கும் தூங்குவதுக்கும் என்ன சம்பந்தம் ? ஒரு வேளை எல்லாம் முடிந்து தூங்குவதை வைத்து அப்படி சொல்லுகிறார்களோ ?.

தகவல் மூலம் : Sify.com

Thursday, September 18, 2008

கரடியாரும் அவர் மகன் வம்பும்...  

நேற்று சிம்புவும் கர.டி.ஆரும் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. எப்படின்னா ஒரு மிக பெரிய உண்மையை (அப்படியா?) பத்திரிக்கையாளர் முன்னிலையில் போட்டு உடைத்து விட்டார் சிம்பு.

அதாவது அவர் இது வரைக்கும் மதுவை கய்யால தொட்டதே இல்லையாம், ங்கொய்யால.. மக்களே இத நீங்க நம்பறீங்களா ?. வேணும்னா அவர் மதுன்னு பேர்ல இருக்கற பொண்ண வேணா கய்யால தொடாம இருந்திருக்கலாம் அல்லது சரக்க கய்யால தொடாமையே அடித்திருக்கலாம் அல்லது நயன் தாராவின் உதவியுடன் அடித்திருக்கலாம்.  

சினிமாவும் சரக்கும் ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள், நண்டு சிண்டுவெல்லாம் சரக்கடிக்குமாம் அங்கே, அப்படி இருக்கும் பொது சிம்பு அடிக்க மாட்டாரா ? அப்படியே அடிக்கவில்லை என்றால் கலை உலகம் அவரை கட்டம் கட்டி விடாதா ? . அடப்போங்கப்பா...  

இந்த இடத்தில் ஒரு மொக்க கவிதை சொல்லவில்லை என்றால் காலம் என்னை மன்னிக்காது. 

சிம்பு ஒட்டலையாம் காரு
ஆனாலும் அவருக்கு கெட்ட பேரு ...

வந்தாரு கரடியாரு
அவருக்கு சவால் விடறது யாரு ...

சிலம்பரசன் குறளரசன் 
ரெண்டு பேரும் கரடியார் சன் ...

வாய்தான் கரடியார் சொத்து
அது வெச்சு சேருது சொத்து ...

கரடியார் தாவுவார் கட்சி
அவர் இருந்தால் அதிரும் காட்சி ...

எப்போதும் படுவார் ஆவேசம்
கூடவே போடுவார் ரெட்டை வேசம் ...

சிம்புவை சுத்தி எப்பவும் வம்பு
கரடியாரே தட்டி வைங்க இல்லனா சிம்பு ஆவாரு சொம்பு ...

(ஒரு சந்தேகம்) நயன் தாரா பிறப்பாலையே ஒரு தாசி இனத்தை சேர்ந்தவராமே, உண்மையா சிம்பு? தாசியா இருந்தா என்ன இல்லனா என்ன அப்படீங்கறீங்களா ? கரெக்ட். கோழி கூனோ குருடோ கொழம்பு ருசியா இருந்தா சரின்னு போற ஆள் நீங்கன்னு கேள்வி பட்டேன்...

புகைப்படம் நன்றி : IndiaGlitz.com
(டிஸ்கி : இது யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டது அல்ல. அப்படி யார் மனதும் புண்பட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல)

கருத்து சொல்லுங்க நண்பர்களே, சும்மா படிச்சிட்டு மட்டும் போக கூடாது :)

Monday, September 8, 2008

எந்திரன் படப்பிடிப்பு ஆரம்பம். முதல் போட்டோ.  

எந்திரன் படப்பிடிப்பு நேற்று முதல் ஆரம்பம். 

நன்றி. சிஃபி.




















Sunday, September 7, 2008

பீகார் வெள்ள நிவாரண நிதி.  

நீங்கள் ஐசிஐசிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு + ஆன்லைன் அக்கௌன்ட் வைத்திருந்தால் பீகார் வெள்ள நிவாரண நிதிக்கு நன்கொடை அளிப்பது மிகவும் எளிது. இது கிவ் இந்தியா என்ற தொண்டு நிறுவனத்துக்கு போகிறது. நிதி வழங்கியதற்கான சான்று வீடு தேடி வரும். 

சக மனிதர்களும் மற்ற உயிரினங்களும் கஷ்டப்படும் இந்த நேரத்தில் உதவி செய்வது மிக்க புண்ணியத்தை தேடி தரும். 

Saturday, August 30, 2008

சாமி கும்பிடுவது தேவையா ?  

முதலில் ஒரு தன்னிலை விளக்கம். எனக்கு கடவுள் நம்பிக்கை அவ்வளவாக கிடையாது. நல்ல பழக்க வழக்கங்களும் யாருக்கும் துரோகம் செய்யாமலும் இருப்பதே கடவுளுக்கு மேலானது என்பதை நம்புபவன் நான். பெற்றோர் மனதை கஷ்டப்படுத்த கூடாது என்பதற்காக அவர்களுடன் கோயில் சென்று கெடா கறியை மட்டும் ருசிக்கும் ஒரு வினோதமான ஆள் நான்.

எங்கள் வீட்டு முன்னால் ஒரு கோயில் ஓரிரு வருடங்களாக இருக்கிறது. அது ஒரு திடீர் கோயில். அது எந்த சாமி கோயில்னு தெரியாமையே ரொம்ப காலம் வாழ்ந்திருக்கேன். அந்த கோயிலை ஒரு அடையாள சின்னமாக (land mark) ஆக மட்டும் உபயோகித்திருக்கிறேன் சில சமயம் அதுவும் 'அந்த புதுசா ஒரு கோயில் கட்ராங்கள்ள அங்க வாங்க' அப்படி தான் சொல்லியிருக்கேன். ஒரு சமயம் அது எந்த சாமி கோயில் என்று ஒரு நண்பர் கேட்டார். அப்பொழுது தான் தெரிந்தது இவ்ளோ நாளா நான் அது எந்த சாமின்னே தெரியாம இருந்திருக்கோமேன்னு ரொம்ப வருத்த பட்டேன்.

நான் முழு நாத்திகன் இல்லை. முழு ஆத்திகனும் இல்லை. எந்த வழியில் போவது என்ற தெளிவும் இல்லை. ஒரு குழப்பமான நிலை. கடவுளை ஏன் கும்பிட வேண்டும் என்ற கேள்விக்கு பதில் இல்லாததால் கும்பிடுவதில்லை. கூடிய சீக்கிரம் ஏதோ ஒரு வழியை முழுதாக தேர்வு செய்ய வேண்டும். இந்த ரெண்டும்கெட்டான் பொழப்பு ரொம்ப கஷ்டம்.
சமீபத்தில் கூட கும்பகோணம் கோயில் தளங்களுக்கு குடும்பத்துடன் சென்றேன். கோயில் வேலைப்பாடுகளை ரசிக்க சொல்லிய மனது என்னவோ கடவுளை கும்பிட சொல்லவில்லை. ஆனாலும் கை கூப்பி நின்றேன்.

நான் கேள்வி பட்ட வரையில் கோயிலுக்கு போவது நல்லது. ஒரு வித வைப்ரேசென் இருக்குமாம். அது உடலுக்கும் மனதுக்கும் நல்லது என்று கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் இப்போதெல்லாம் என்ன செய்கிறார்கள் என்றால் ரோட்டில் நின்றோ அல்லது வண்டியில் போய்க்கொண்டே கையை வாயின் அருகில் வைத்து ஒரு ஆர்க் போட்டு விட்டு போகிறார்கள். இதில் காமெடி என்னவென்றால் சின்ன குழந்தைகளை கூட அவ்வாறே செய்ய சொல்கிறார்கள் பெற்றோர்கள். அவர்களும் செய்கிறார்கள். அந்த சின்ன குழந்தைகள் அப்படி என்னதான் வேண்டும் ?. எனக்கு புரியவில்லை. டீச்சர் அடிக்ககூடாதுன்னா ? சாமி இந்த மாதிரி சின்ன புள்ள தனமான கோரிக்கையெல்லாம் செல்லாது செல்லாது என்று சொல்லி விட மாட்டாரா ?.

எனக்கு தெரிந்து கஷ்டம் வந்தால் மட்டும் சாமியை கூப்பிடும் ஆட்கள் நிறைய இருக்கிறார்கள். அது நல்லதா ?. சில ஆட்கள் கோயிலே கதி என்று கிடக்கிறார்கள். அதுவும் சரியா ?. பதில் இல்லை.

அதே மாதிரி விதியையும், ஜாதகத்தையும் நொந்து கொண்டு நொண்டி சாக்கு தேடும் நிறைய பேரை தெரியும். அவர்கள் எல்லாம் என்னை பொறுத்த வரையில் முட்டாள்கள். கையாலாகதவர்கள். நம்மையும் மீறி ஒரு சக்தி இருக்கும் என்பதை நம்பினாலே போதும். மற்ற எதையும் நம்ப தேவையில்லை.

என்னடா சாமி பெற வெச்சுகிட்டு அறிவுரை பண்ணிக்கிட்டு இருக்கானேன்னு யோசிக்கறீங்களா? அது என் கட்டுப்பாடில்லாமல் நடந்த விசியம். அவ்ளோ தான்.

நண்பர்களே.. என் குழப்பத்தை தீர்த்து வையுங்கள். அல்லது இன்னும் குழப்புங்கள். பின்னூட்டம் அவசியம் :)

Friday, July 11, 2008

விஜயாவதாரம்...  















விஜய்யின் பன்னிரண்டு அவதாரங்கள்.. கமலின் தசாவதாரத்துக்கு போட்டியாக..

Sunday, June 29, 2008

தசாவதாரம் விமர்சனங்களை பற்றி ஒரு விமர்சனம்.  

அப்பப்பா.. கமலே உங்களுக்கு இதெல்லாம் தேவையா? ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளை போலவே நீங்களும் படம் எடுத்திருந்தால் இவ்வளவு விமர்சனங்களை சந்தித்து இருக்க மாட்டீர்கள். உங்கள் பிரச்சினையே புதுசாக நீங்கள் முயற்சி செய்வது தான். குருவி போல மசாலா குப்பைகளை ரசிக்கும் ரசிகர்கள் உங்கள் படத்தை கண்டபடி விமர்சிக்கிறார்கள். தமிழ் சினிமாவில் புது சோறு சாப்பிட முயற்சி செய்வது நீங்கள் தான். மற்ற அனைவரும் பழைய சோறு தான் சப்பு கொட்டி சாப்பிடுகிறார்கள் என்பது என் தாழ்மையான கருத்து.

கருத்து சொல்லவும் படத்தை பார்க்காமல் இருப்பதட்கும் அனைவருக்கும் உரிமை உண்டு. படத்தில் குறைகள் உள்ளது என்பது உண்மை தான். குறையே இல்லாத படங்களை யாராலும் தர முடியாது. குறைகளை விட நிறைகள் சிறிது அதிகம் இருந்தால் படம் ரசிக்கும் படி இருக்கும். அது தசாவதாரத்துக்கும் பொருந்தும்.

கமல் எவ்வளவு நல்ல படம் தந்தாலும் அதை சரியில்லை என்று சொல்வதற்கு ஒரு கூட்டம் இருக்கிறது. 'அன்பே சிவம்' என்று ஒரு நல்ல படத்தை கமல் தந்தார். அதை எத்தனை பேர் ரசித்து பார்த்தார்கள் ? கமலின் படங்களுக்கு இவ்வளவு லாஜிக் கேட்கும் மக்கள் 'சாமி' போன்ற லாஜிக் இல்லாத மசாலா குப்பைகளை எப்படி பார்க்கிறார்கள் ?. கமல் மட்டும் என்ன இளித்த வாயரா? எல்லாரையும் போலவும் அதை விடவும் சிறப்பாகவும் மசாலா படங்களை கமலால் நிச்சயமாக தர முடியும். ஆனால் அவர் அதை எல்லாம் விட்டு விட்டு ஏன் புது முயற்சி செய்கிறார் ? எல்லாருக்கும் பிடிக்கும் படி படம் எடுப்பது இயலாத காரியம்.

என்னை மிகவும் கடுப்படித்த விமர்சனம் விகடன் விமர்சனம் தான். வெறும் 43 மார்க் கொடுத்திருந்தார்கள். குருவிக்கும் அதே மார்க் தான், அஜித் பில்லாவுக்கும் அதே மார்க் தான். அவர்கள் எந்த படத்துக்கு தான் நூறு மார்க் கொடுப்பார்கள்? தெரியவில்லை. நூறெல்லாம் நான் கேட்கவில்லை இந்த படத்துக்கு. ஆனால் குருவிக்கும், அஜித் பில்லாவுக்கும் கொடுத்த மார்க் தான் தசாவதாரத்துக்கும் என்றால் என்னால் சகித்து கொள்ள முடியவில்லை.

விகடனில் விமர்சனத்தில் சொல்லியிருக்கிறார்கள் " பல்லாயிரம் உயிர்களைப் பலிகொண்ட சுனாமியை இப்படி ஒரு கோணத்தில் அணுகலாம் என்ற ஒரு புள்ளிதான் கதை. ஆனால், ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி, ஊரே துடிதுடித்துத் திரியும் சூழலில், கமலும் அசினும் காதல் பேசுவது... ஸாரி ! "..

ஒரு நண்பர் நச்சுன்னு கேட்டிருந்தார். "சென்னையில் சுனாமி வந்து பல்லாயிரம் பேர் இறந்த போது விகடன் என்ன செய்தது ? போட்டோ பிடித்து கவர் ஸ்டோரி போட்டதை தவிர ?. சுனாமி வந்து இவ்வளவு பேர் இறந்து விட்டார்கள் என்று வருந்தி அந்த வார விகடனில் ஜோக் எதுவும் போடாமலா இருந்தார்கள் ?. காதல் கதை எதுவும் வரவே இல்லையா அந்த வாரம் ?. இப்படி செய்யும் விகடன் இந்த கமெண்டை தசாவதாரத்துக்கு கொடுக்கும் தகுதி இருக்கிறதா ?"

அதே தான் என்னோட கேள்வியும்.

என்னை பொறுத்த வரையில் தசாவதாரம் என்பது ஒரு பாடம். Chaos தியரி பற்றி என் படிக்கும் ஆர்வத்தை தூண்டியது இந்த படம் தான். எதிர்பார்த்த படி படம் இல்லை என்றாலும் படம் என்னை ஏமாற்றவில்லை. ஒரு முறை தாரளமாக பார்க்கலாம் திரை அரங்கில். புரியவில்லை என்றால் மீண்டும் பாருங்கள் திருட்டு V.C.D யில்....

Thursday, June 19, 2008

வசூல் ராஜா..  

தசாவதாரத்தின் ஒரு வார வசூல் வாய் பிளக்க வைக்கும் நூறு கோடி !!!

சோர்ஸ் : Economic Times

கமலின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது !

Saturday, June 14, 2008

ஜன்னத்(ஹிந்தி) பட விமர்சனம்.  

இன்று ஜன்னத்(Jannat) பார்த்தேன் ஆங்கில சப் டைட்டிலுடன்..

வாவ். நான் இந்த ஆண்டு பார்த்த ஹிந்தி படங்களில் தாரே ஜமின் பர்-க்கு பிறகு என்னை கவர்ந்தது இந்த படம் தான். ஹிந்தி கமல் (முத்தம் கொடுப்பதில் மட்டும்) இம்ரான் ஹஸ்மி ஹீரோ. இந்த படம் கிரிக்கெட் பெட்டிங் தொடர்பானது. ஆகையால் ரொம்ப ஆர்வமாக பார்க்க அமர்ந்தேன். இனி பார்ப்போம் சீன் பை சீன்.

காசுக்கு கார்ட்ஸ் ஆடி டைம் பாஸ் பண்ணும் ஒரு சாதாரண ஊதாரி வாலிபனாக ஹீரோ அறிமுகம் ஆகிறார். அவர் கார்ட்ஸ் ஆடும் போதே அவர் காசுக்காக எந்த ரிஸ்க்கும் எடுக்க கூடியவர் என்று தெளிவாக சொல்லி விடுகிறார்கள். ஏரியா தாதா விடம் கடன் வாங்கி கார்ட்ஸ் ஆடி ஒரு லட்சம் கடனாளி ஆகிறார் ஹீரோ. தாதா பணம் கேட்டு அடிக்கடி மிரட்டுகிறார்.

அடுத்து கதாநாயகி அறிமுகம். ஷாப்பிங் மாலில் ஹீரோ ஹீரோயினை பார்க்கிறார். காதல் ஆரம்பம். ஹீரோயின் வாங்க காசு இல்லாமல் ஒரு மோதிரத்தை ஏக்கமாக பார்த்து கொண்டிருக்கும் போது ஹீரோ அதிரடியாக கண்ணாடியை உடைத்துக்கொண்டு அறிமுகம் ஆகிறார். நண்பரின் பணத்தில் அதே மோதிரத்தை வாங்கி ஹீரோயினிடம் கொடுக்கிறார். ஹீரோயினை கவர இன்னும் பல வழிகளில் பந்தா செய்கிறார். நிறைய பணம் தேவைப்படுகிறது.

அப்பொழுது தான் தற்செயலாக அவருக்குள் ஒளிந்திருக்கும் ஒரு திறமை வெளிப்படுகிறது. அதாவது கிரிக்கெட் மேட்ச் பார்க்கும் போது அடுத்து என்ன நடக்கும் என்று guess செய்வது. முழுசாக நம்ப முடியவில்லை என்றாலும் காட்சியமைப்பு நம்ப வைக்கிறது. லோக்கலில் பெட்டிங் செய்து சில பல லட்சம் மற்றும் காருக்கு அதிபதி ஆகிறார். ஹீரோயினும் கவரப்படுகிறார் ஒரு வழியாக. அடுத்து சில பாடல்கள். இதற்கிடையில் போலீஸ் சந்தேகப்பட்டு ஹீரோவை கைது செய்ய ஆதாரம் தேடுகிறது. ஸ்மார்ட் CBI அதிகாரி ஒருவர் அறிமுகம் ஆகிறார். அடுத்து பெரிய bookie யான வில்லனின் அறிமுகத்தால் தென் ஆப்ரிக்கா போகிறார் ஹீரோ. அங்கும் வெற்றி மேல் வெற்றி தான்.

கிரிக்கெட் வீரர்களின் வீக் பாயிண்டை பிடித்து அதை நிறைவேற்றுவதன் மூலம் விளையாட்டின் முடிவு ஹீரோவால் தீர்மானிக்க படுகிறது. ஹீரோயினும் தென் ஆப்ரிக்கா அழைத்துவரப்படுகிறார் ஹீரோவால். சொகுசு மாளிகையில் வாழ்க்கையை (கல்யாணம் பண்ணாமல் தான்) ஆரம்பிக்கிறார்கள். அடுத்து அதே CBI ஆபிசர் தென் ஆப்ரிக்கா வந்து ஹீரோயினிடம் பேசி ஹீரோ செய்யும் பெட்டிங்கை போட்டு கொடுத்து விடுகிறார். பெரிய bookie வில்லன் பெட்டிங்கில் பணம் பண்ணி அதை தீவிரவாத செயலுக்கு பயன்படுத்துகிறார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்கிறார். ஹீரோயின் ஹீரோவிடம் கோபப்படுகிறார். ஹீரோயின் கர்ப்பம் வேறு ஆகி விடுகிறார்(இதுவும் கல்யாணம் ஆகாம தாங்க!). ஹீரோவின் மனதை மற்ற பல வழிகளில் ஹீரோயின் முயற்சி செய்கிறார்.

ஆனால் வில்லன் பணம் காய்க்கும் மரமான ஹீரோவை விட மறுக்கிறார். வில்லன் ஹீரோவிடம் கடைசியாய் ஒரே ஒரு உலக கோப்பை தொடரில் வேலை செய் அப்புறம் நீ போய் விடு பெரிய சொத்துடன் என்கிறார். ஹீரோவும் ஒத்துக்கொள்கிறார். அதற்காக ஒரு வீரரிடம் பேரம் பேசும் போது அந்த அணியின் கோச் பார்த்து விடுகிறார் (அந்த கோச் பாப் வூல்மர் போலவே இருக்கிறார்). வில்லனின் ஆட்கள் அந்த கோச் ஐ கொலை செய்து விடுகிறார்கள். பழி ஹீரோவின் மீது விழுகிறது. போலீஸ் துரத்துகிறது.

இறுதி கட்ட காட்சியில் ஹீரோவை சரண் அடைய சொல்லி ஹீரோயின் வற்புறுத்துகிறார். அதன்படி ஹீரோவும் செய்கிறார். ஆனால் விதி வேறு விதமாக விளையாடுகிறது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் மூன்று படத்தின் கிளைமாக்ஸ் ஐ எனக்கு நினைவில் கொண்டு வந்தது. gangster(ஹிந்தி), பீமா மற்றும் திருட்டு பயலே. எப்படி என்றால் ஹீரோ சரண் அடைய ஒத்துக்கொண்டு துப்பாக்கியை கீழே போடுகிறார். அப்பொழுது அந்த ஹீரோயினின் மோதிரமும் துப்பாக்கியின் அருகில் கீழே விழுந்து விடுகிறது. அதை எடுக்க குனிகிறார். அப்பொழுது போலீஸ் துப்பாக்கியை தான் எடுக்கிறார் என்று நினைத்து சுட்டு கொன்று விடுகிறார்கள். ஹீரோயின் ஆபாச வார்த்தைகளில் காவல் துறையை வசை பாடுகிறார். அத்துடன் படம் முடிகிறது. எனக்கு ஒரு நிறைவான படம் பார்த்த திருப்தி.

படத்தின் நிறைகள்.
.. நல்ல திரைக்கதை.
.. இம்ரானின் பொருத்தமான நடிப்பு.
.. கிளைமாக்ஸ்

குறைகள்.
.. ஹீரோயின் (அட்டு பிகர், ஹிந்தி நடிகை மாதிரியே இல்லைங்க. வேஸ்ட் )
.. திடீர் என்று முளைக்கும் தெய்வீக காதல்.

மொத்தத்தில் குறைகளை விட நிறைகளே அதிகம். படத்தை தாராளமாக பார்க்கலாம். இந்த படத்தை பார்த்து முடித்தவுடன் எனக்கு கிரிக்கெட் மீதான ஆர்வம் கொஞ்சம் குறைந்தது என்னவோ உண்மை தான். அதே உணர்வு தான் உங்களுக்கும் உண்டாகும். பார்த்து விட்டு சொல்லுங்கள்.

மதிப்பெண் - 7 / 10

Sunday, June 8, 2008

நூறு ரூபாய் நோட்டு...  

நேற்று ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் ஏ.டி.எம்மில் நான் எடுத்த நூறு ரூபாய் நோட்டை தான் உங்கள் பார்வைக்கு இங்கே கொடுத்துள்ளேன். நான் எடுத்தது மொத்தம் ஐந்தாயுரம் ரூபாய் (வீட்டு வாடகை மற்றும் இதர செலவுகளுக்காக) . எண்ணி மட்டும் பார்த்தேன் ஐம்பது நோட்டு இருக்கிறதா என்று. ஒவ்வொரு நோட்டையும் சரிவர செக் செய்யாமல் விட்டதன் விளைவு இப்பொழுது ப்ளாக்கில் பொலம்பும் படி ஆகிவிட்டது.

இது முழுக்க முழுக்க வங்கியின் தவறு. சரிவர செக் செய்யாமல் ஏ.டி.எம் இயந்திரத்தில் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை போடுகிறார்கள். இதை யாரிடம் முறையிடுவதென்று இந்த முன்னேறிய தகவல் தொழில்நுட்ப உலகத்தில் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படியே புகார் கூறினாலும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஏ.டி.எம்மில் தான் அந்த நூறு ரூபாய் தாள் எடுக்கப்பட்டது என்பதற்கு நான் எதை சாட்சியாக கூற முடியும் ? எனக்கு ஒரு மண்ணும் புரியவில்லை.

இந்த பிரச்சனையை கையாள எனக்கு உங்கள் ஆலோசனை தேவை நண்பர்களே.. ஹெல்ப் ப்ளீஸ்...

Tuesday, June 3, 2008

கலைஞர் 85..  

இன்று ( ஜூன் 3 ) கலைஞரின் 85 ஆவது பிறந்த நாள். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு கலைஞர் அய்யா அவர்களே.

பிறந்த நாள் கொண்டாடும் இந்த இனிய நேரத்தில் அவருக்கு சில remainder's.
.. ஹோகேனக்கள் என்னாச்சு கலைஞர் அய்யா ? அவ்ளோ தானா ? கர்நாடகத்தில் ஆட்சியும் வந்தாச்சு அறியணையும் ஏறியாச்சு, திட்டத்தை முடக்க கர்நாடகத்தில் திட்டம் தீட்டப்படுகிறது. சரத் குமார் கேட்டது நியாயமான கேள்வி நம்ம வீட்டு பைப்ல தண்ணி பிடிக்க யார கேக்கணும். காவேரி கர்நாடகத்தில் இருந்து வந்தாலும் அவர்கள் பிரித்து கொடுக்கும் தண்ணீரில் இருந்து தான் நாம் இந்த திட்டத்தை நிறைவேற்றுகிறோம். இந்த திட்டத்துக்காக அவர்கள் ஒண்ணும் அதிக தண்ணி விட போவதில்லை. அப்புறம் எதுக்கு இவ்ளோ பிரச்சனை பண்ணுகிறார்கள் என்று தெரியவில்லை. ஆகவே அய்யா கூடிய விரைவில் திட்டம் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுங்கள்.

.. சேது சமுத்திரம் என்னாச்சு ? உங்கள் பிறந்த நாள் விழாவில் எப்பாடு பட்டாவது திட்டத்தை நிறைவேற்றுவேன் என்று நீங்கள் உறுதி கூறியது சந்தோசமான விசியம். திட்டத்தில் பல ஓட்டைகள் இருப்பதாக அறிகிறேன். பெரிய கப்பல் போகாது போன்ற குறைகள் பெரியதாக expose செய்யப்படுகிறது. அந்த மாதிரி காரணங்களை சுட்டி காட்டி திட்டத்தை தடுக்க முயன்றால் பாராட்டலாம், ஆனால் அவர்கள் கடவுளின் பெயரால் அல்லவா திட்டத்தை முடக்க பெரு முயற்சி செய்கிறார்கள். மத்திய அமைச்சர் பாலுவின் கப்பல்கள் ஓடுவதற்கே திட்டத்தை நிறைவேற்றுகிறார்கள் என்று எதிரி கட்சிகள் கூச்சல் போடுகிறார்கள். அது உண்மையாகவே இருந்தாலும் சேது சமுத்திரம் எல்லாருக்கும் பொதுவானது. யார் வேண்டுமானாலும் கப்பல் விடலாம். பாலு தடுக்க மாட்டார் நிச்சயமாக. ஆகவே அய்யா விரைந்து நடவடிக்கை எடுங்கள். சேது பாலத்தை இடிக்காமல் வேறு வழியில் திட்டத்தை நிறைவேற்றவும் சாத்யகூறுகளை ஆராய்வது நல்லது.

இந்த தள்ளாத வயதில் நீங்கள் உங்களால் முடிந்த அளவு மக்கள் பணியாற்றுகிறீர்கள், நான் முன்பொரு பதிவில் சொன்னது போல் நீங்கள் ஓய்வெடுப்பது நல்லது பொறுப்புகளை பகிர்ந்து அளியுங்கள் கலைஞர் அவர்களே. ஓவர் லோட் இந்த வயதில் நல்லதில்லை என்பது என் தாழ்மையான கருத்து.

கலைஞரிடம் இருந்து கட்சி பேதமில்லாமல் கற்றுக்கொள்ள இளைய தலைமுறைக்கு நிறைய விசியங்கள் இருக்கிறது.

கலைஞரிடம் எனக்கு பிடித்த விசியங்கள் கீழே.
.. தமிழ் ஆற்றல்.
.. தமிழ் வளர ஓரளவுக்கு முயற்சிகள் எடுப்பது.
.. வார்த்தை பிரயோகம்.
.. நக்கல் பேச்சு.
.. சுறுசுறுப்பு.
.. உழவர் சந்தை மாதிரி நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தும் திறமை.

அவரிடம் எனக்கு பிடிக்காதது.
.. குடும்பத்துக்கு அதிக முக்கியத்துவம்.
.. சில நேரங்களில் அவர் எடுக்கும் சுய நலமான முடிவுகள்.
.. சில திட்டங்களை நிறைவேற்றும் போது வேகக்குறைவு. உதாரணம் ஹோகேனக்கள் குடிநீர் திட்டம்.
.. ஓவர் பொறுமை, சில நேரங்களில் ஜெ ஜெ போன்றவர்களின் அதிரடி அரசியல் தான் சரியாக வரும்.

கட்சி பேதமின்றி அனைத்து தரப்பிலிருந்தும் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன . கலைஞரின் நிறை குறைகளை நீங்களும் அலச இது ஒரு நல்ல வாய்ப்பு. Don't miss it !.. :)

Saturday, May 31, 2008

Corporate language and its real meaning...  

"We will do it"
means
" You will do it"

"You have done a great job"
means
"More work to be given to you"

"We are working on it"
means
"We have not yet started working on the same"

"Tomorrow first thing in the morning"
means
"Its not getting done... At least not tomorrow !".

"After discussion we will decide - I am very open to views"
means
"I have already decided, I will tell you what to do"

"There was a slight miscommunication"
means
"We had actually lied"

"Lets call a meeting and discuss"
means
"I have no time now, will talk later"

"We can always do it"
means
"We actually cannot do the same on time"

"We are on the right track but there needs to be a slight extension of the deadline"
means
"The project is screwed up, we cannot deliver on time."

"We had slight differences of opinion"
means
"We had actually fought"

"Make a list of the work that you do and let's see how I can help you"
means
"Anyway you have to find a way out no help from me"

"You should have told me earlier"
means
"Well even if you told me earlier that would have made hardly any difference!"

"We need to find out the real reason"
means
"Well I will tell you where your fault is"

"Well... family is important, your leave is always granted. Just ensure that the work is not affected"
means
"Finish ur work and then go."

"We are a team"
means
"I am not the only one to be blamed"

"That's actually a good question"
means
"I do not know anything about it"

"All the Best"
means
" You are in trouble"

(இதை எனக்கு forward செய்த நண்பர் அஜய்க்கு நன்றி)

Thursday, May 29, 2008

இலவசமாய் குறுஞ்செய்தி அனுப்ப..  

இலவசமாக இந்தியாவுக்குள் எங்கு வேண்டுமானாலும் குறுஞ்செய்தி அனுப்ப இங்கே சொடுக்கி மிக எளிதில் குறுஞ்செய்தி அனுப்பி மகிழுங்கள். ஏர்டெல், வோடாபோன் காரர்களுக்கு தலைவலிதான் இனிமேல்.

Check it out guys, you can save lot of money !!

Wednesday, May 21, 2008

தமிழக அரசியல் நிலவரம்..  

கடந்த இரு வாரங்களில் தமிழகம் பார்த்த அரசியல் சதுரங்க ஆட்டங்களை உங்களுக்கு தொகுத்து வழங்குகிறேன்.

கலைஞர் உடல் நிலை.
கவலை அளிக்கும் விசியம் தி.மு.க தொண்டர்களுக்கு. கழுத்து மற்றும் முதுகு வழி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு வீடு திரும்பிவிட்டார். கலைஞருக்கு இப்போதைய அவசிய தேவை ஓய்வு. அது அவருக்கு கிடைக்க அவர் பொறுப்புகளை பகிர்ந்து அளிக்கலாம். திரு. அன்பழகனுக்கு முதல்வர் ஆக ஒரு வாய்ப்பு கொடுக்கலாம். அவர் விரும்பாவிடில் திரு.ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி அளிக்கலாம். என்னை கேட்டால் வாரிசு அடிப்படையில் வருவது ஒன்றும் கொலை குற்றம் இல்லை. உலகம் முழுவதும் குடும்பத்தவர் ஆட்சிக்கு வருவது ஒன்றும் புதிதல்ல. திரு. ஸ்டாலினுக்கு என்ன பிரச்சனை என்றால் அவரை அவர் தந்தையுடன் ஒப்பிட்டு மதிப்பீடு செய்கிறார்கள். அது தவறு. தந்தையின் திறமையை மகனிடமும் எதிர் பார்ப்பது தவறு. கிரிக்கெட் உதாரணம் வேண்டுமானால் ரோகன் கவாஸ்கர். வாரிசு அடிப்படையில் மந்திரி ஆன தயாநிதி மாறன் பல நல்ல காரியங்களை செய்தது யாராலும் மறுக்க முடியாது. அதே மாதிரி ஸ்டாலினுக்கும் ஒரு வாய்ப்பாவது கொடுத்து அவரின் பர்பாமன்ஸ் பார்த்தால் ஒன்றும் தவறில்லை என்பது என் கருத்து.

அமைச்சர் பூங்கோதை ராஜினாமா.
அரசு இயந்திரத்தை தவறாக பயன் படுத்தியதாக குற்றம் நிரூபிக்கப்பட்டு அவரே பதவியை ராஜினாமா செய்து விட்டார் அல்லது செய்ய வைக்கப்பட்டார். இந்த தவறை வெளிச்சம் போட்டு காட்டி புண்ணியத்தை தேடிக்கொண்டவர் சுப்ரமண்ய சுவாமி அவர்கள். ஆவணங்களுக்காக ரெகார்ட் பண்ணிவெச்ச பேச்சு எப்படியோ சுவாமி கையில் சிக்கி ரிலீஸ் ஆகி விட்டது. இன்னும் கூட நிறைய மந்திரிகள் பேசிய பேச்சு இருக்கிறது என்கிறார் சுவாமி. சுவாமி மாதிரி ஆட்களும் தேவை தான் அப்பொழுதுதான் ஆட்சியாளர்களுக்கு சற்று பயம் இருக்கும். ஆனாலும் அரசு இயந்திரத்தை அவர்கள் தவறாக உபயோகிக்க மாட்டார்கள் என்று சொல்ல முடியாது. வேண்டுமானால் தொலை பேசியில் தொல்லை தருவது குறையலாம். கலைஞருக்கு ஒரு கேள்வி, இதே மாதிரி வேறு யாராவது மூத்த மந்திரி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் உங்கள் நிலை/முடிவு என்ன ?

கார்த்திக் கட்சியில் இருந்து நீக்கம்.
இந்த நிகழ்ச்சி என்னை வெகுவாக ரசித்து சிரிக்க வைத்தது. காரணம் கார்த்திக் போன்ற காமெடி அரசியல்வாதியை தமிழகம் கண்டதில்லை என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். கார்த்திக் ஒரு கூல் அரசியல்வாதி. பொதுக்குழு கூட்டம் நடந்தாலும் கொடைக்கானலில் ஓய்வெடுக்ககூடிய தில்லு இவருக்கு மட்டும் தான் இருக்கிறது. ஸோ ஸ்பெஷல் அரசியல்வாதி. தொப்பி கூலிங் கிளாஸ் இல்லாமல் இவரை பார்க்கவே முடியாது. கட்சியின் அகில இந்திய தலைவர் பிஸ்வாஸ் இவரை பதவி நீக்கம் செய்துவிட்டார். உடனடியாக இன்னொரு கட்சி ஆரம்பிக்க தொண்டர்கள் கார்த்திக்கை வலியுறித்தி தொந்தரவு செய்வதாக கார்த்திக் ஒரு பேட்டியில் கூறினார். முன்னேற துடிக்கும் அரசியல்வாதிகள் விஜயகாந்திடம் இருந்து பல விசியங்களை கற்றுக்கொள்ளவேண்டும்.

ஜெ ஜெ வின் உற்சாகம்.

நீண்ட ஓய்வை ஜெ ஜெ நடனமாடி கொண்டாடினார் கொடநாட்டில். தொண்டர்கள் கொஞ்சம் உற்சாகம் அடைவார்கள். வாக்காளர்களிடம் நெருக்கத்தை கூட்டிக்கொள்ள அரசியல்வாதிகள் பின் பற்றும் முறை இது. எம்.ஜி.ஆர் முதல் ராஜீவ் காந்தி வரை அனைவரும் இதே மாதிரி பல வழிவகைகளை கையாண்டு தொண்டர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்கள். என்னை கேட்டால் ஜெ ஜெ ஒரு நல்ல பொறுப்புள்ள எதிர்க்கட்சி தலைவியாக இன்னும் சிறப்பாக செயல் பட முடியும். மூன்று மாதத்துக்கு ஒரு தடவை சட்ட மன்றம் போனாலே தன் கடமை முடிந்துவிட்டதென்கிற எண்ணத்தை ஜெ ஜெ கை விட வேண்டும். மக்கள் பிரச்சனைகளுக்காக அதிகம் குரல் கொடுக்க வேண்டும். ராமதாஸ் அய்யா கூட்டணியில் இருந்து கொண்டே அரசுக்கு குடைச்சல் தருகிறார். நியாயப்படி பார்த்தால் அதிமுக தான் எதிர் கட்சி. ஆனால் பா... தான் அரசை அதிகம் எதிர்த்து செய்திகளில் அடி படுகிறது. ஜெ ஜெ கொஞ்சம் இதையெல்லாம் கவனிப்பாரா ??

நண்பர்களே, தங்கள் கருத்துக்களை முடிந்த வரை பதிவு செய்யுங்கள்..

Sunday, May 18, 2008

ஹீரோவா ஜீரோவா ?.  

நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை சார்பாக சூர்யா, விஜய், மாதவன், ஜோதிகா நடித்து குழந்தைகளின் கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கி ஒரு டாகுமெண்டரி ரிலீஸ் ஆகியுள்ளது. பார்க்க விரும்புபவர்கள் இங்கே சொடுக்குங்கள்.

கான்செப்ட் என்னன்னா படிச்சாதான் ஹீரோ படிக்கலேன்னா ஜீரோ அப்படின்னு நம்ம ஹீரோக்கள் குழந்தைகளிடம் விளக்குகிறார்கள் ஆடல் பாடலுடன். நடிகர்களுக்கு பொறுப்புணர்வு வந்திருப்பது ரொம்ப நல்ல விசியம். இங்கே சுனாமி வந்த போது கூட ஆஸ்திரேலியாவில் ஓய்வெடுத்த நடிகர்கள் இருக்கிறார்கள். விவேக் ஒபெராய் வந்து நம் நடிகர்களின் கண்களை ஓரளவுக்கு திறந்து விட்டார். மக்களை நம்பி இருக்கும் நடிகர்கள் மக்களுக்காக ஒரு துரும்பை கூட கிள்ளி போடாமல் இருப்பது நல்லதல்ல. அவர்களின் சமூக பொருப்புணர்ச்சியை நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளதால் இந்த மாதிரி காட்சிகள் தமிழகத்தில் அரங்கேறுகிறது. மூல காரணம் எதுவாய் இருப்பினும் அவர்கள் செய்யும் விசியம் ரொம்ப நல்லது. இவர்கள் கொடுக்கும் அறிவுரையை ஒரு நூறு பேராவது கேட்டு தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால் அவர்களுக்கு வெற்றி தான்.

அந்த ஆவண படத்தில் நடிகர்கள் குழந்தைகளிடம், படித்தால் தான் ஹீரோ இல்லனா ஜீரோ என்று அறிவுரை கூறுகிறார்கள். இதை முறைப்படி பெற்றோர்களிடம் விளக்குவது போல் தான் இருந்திருக்க வேண்டும். எந்த குழந்தையும் நான் கல் தான் உடைப்பேன் பள்ளிக்கு போக மாட்டேன் என்று பொதுவாக சொல்லாது. பெற்றோர்களின் வசதியின்மை காரணமாகத்தான் அவர்கள் வேலை செய்யும் படி கட்டாயப்படுத்த படுகிறார்கள்.
சில காட்சிகளில் பெற்றோர்களிடமும் விளக்குகிறார்கள். எல்லா இடங்களிலும் அப்படியே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். விஜய் விளக்கும் காட்சி பொருள் பொதிந்து உள்ளது.

நடிகர்கள் தங்களின் புகழை இந்த மாதிரி ஒரு நல்ல காரியத்துக்கு பயன்படுத்த முயற்சி செய்திருப்பது பாராட்டுக்குரியது. சினிமாக்காரர்கள் நினைத்தால் தங்கள் புகழை இன்னும் நல்ல விதமாக பயன்படுத்த முடியும்.

சினிமா ஹீரோக்கள் எளிதில் நிஜ ஹீரோக்கள் ஆகலாம் இந்த மாதிரி விசியங்களில் அதிக கவனம் செலுத்தினால்.. இல்லையெனில் ஜீரோ தான்...

இன்னொரு கேள்வியும் எழுவதை தவிர்க்க முடியவில்லை. கல்வியின் அவசியத்தை நன்கு கற்ற மேதைகள் (. ம். அப்துல் கலாம்) விளக்குவது / அறிவுறுத்துவது சிறந்ததா இல்லை அதிகம் படிக்காத நடிகர்கள் வலியுறுத்துவது சிறந்ததா ?

Wednesday, May 14, 2008

என் காதல்கள் ..... பகுதி 1.....  


உனக்கெல்லாம் காதல பத்தி என்ன தெரியும்னு நக்கலா கேக்கற நண்பர்களே ! உங்களுக்கெல்லாம் இந்த பதிவின் மூலம் சரியான பதிலடி கொடுக்க வந்தேவிட்டேன். எனக்கு காதல பத்தியும் தெரியும், காதல் பண்ணவும் தெரியும். எப்படின்னு கேக்கறீங்களா தொடர்ந்து படிங்க ..

மேலே இருக்கறது தான் நிஜ இதயத்தோட படம், எப்பவும் காதல்னா ஒரே அம்பு விடற இதயம் படத்த பாத்து போர் அடிச்சு போன ஆயிரக்கணக்கான நல்ல இதயங்களுக்காக ஒரு நிஜ இதயம் படம்..

என் காதல்களை பத்தி இந்த பதிவு உங்களுக்கு தெளிவா சொல்லிரும். நானும் அந்த மயக்கத்தில் கொஞ்ச ரொம்ப காலம் இருந்திருக்கிறேன் இருக்கிறேன் .
ஸ்கூல் போற சமயத்துல இருந்தே அதெல்லாம் ஆரம்பமாயுருச்சுங்க. ஆறாம் வகுப்பிலேயே (too late ?) நாங்கெல்லாம் ஒரு தலை காதல் பண்ணிடோம்ங்க. பொண்ணுக பேரெல்லாம் சொல்ல போறதில்ல. நடந்த விசியங்கள் மட்டும் தான்.

ஸ்கூல் ல ஒரு பொண்ணு எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுக்கான காரணங்கள்.
.. கமல் ஹாசன்
.. நண்பர்கள்

ரெண்டே காரணம் தாங்க.
அப்படி என்னடா வித்யாசமான காதல்னு கேக்கறது புரியுது. கமல் ஹாசன் இங்க எங்க வந்தாருன்னு கேக்கறீங்களா ? அவரோட படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுல வர்ற காதல் காட்சிகள் தான் எனக்கு தூண்டுகோல். அவர் கதாநாயகிகளை கையாளும் விதத்தில் ஒருவித நளினம் இருக்கும். அப்படியே ரசிகர்களை புல்லரிக்க வைத்து விடுவார். அப்படி இருக்கும் போதுதான், அந்த பொன்நாள் வந்தது.. நான் ஆறாவது சேர போன அதே நாளில் தான் அந்த பொண்ணும் அவங்க அப்பாவோட வந்துச்சு ஸ்கூல் ல சேர.. முதல் காதல் வரப்போவதை அறியாமல் விண்ணப்பத்தில் கையெழுத்து போட்டான் ஒரு நல்லவன் (நான்தாங்க !)...

ரெண்டாவது முக்கியமான காரணம் நண்பர்கள், பேரு கூட நினைவுல இல்ல. ஆனா அவங்க செஞ்சத என்னால மறக்க முடியாது. தெரியாத்தனமா அந்த பொண்ணும் நானும் ஒரே நாள்ல தான் ஸ்கூல் ல ஜாயின் பண்ணோம்னு சொல்லி தொலைச்சுட்டேன். அப்பப்பா அவங்க என்ன டார்ச்சர் பண்ணி நானும் அந்த பொண்ணும் லவ் பண்றோம்னு கத கட்டி விட்டுட்டாங்க. அப்போ தான் அந்த பொண்ணையே நல்லா பாத்தேன், அப்புறம் பசங்க சொல்ற மாதிரி நாம ஏன் அந்த பொண்ணையே காதல் பண்ணி எம்மேல போடப்பட்ட வீண்பழி எல்லாத்தையும் தொடச்சு எறியக்கூடாதுன்னு முடிவு பண்ணி ஒரு தலை காதலுக்கு அஸ்திவாரம் போட்டேன்.

வீண்பழி துடைக்க புறப்பட்டு,
காதல் சுழியில் அகப்பட்டு,
பலியாடு ஆக்கப்பட்டு,
விழி பிதுக்கப்பட்டு,
மொக்க கவிதை எழுதும் அளவுக்கு தள்ளப்பட்டு,
தள்ளாடி நின்றான் ஒருவன் ....

கவிதைங்க.. கொஞ்சம் பொறுத்துக்குங்க.. காதல் வந்தால் கூடவே வரும் இலவச இணைப்பு தானே கவிதை !!!
+2 வரைக்கும் அந்த பொண்ணு என்கூட தான் படிச்சிது. ஆறேழு வருசமா அந்த பொண்ணு கிட்ட நா பேசின வார்த்தைகள் ஒரு பத்து இருக்கும் !! அவ்வளவு தான் என் லவ்வு. என்ன பண்ண சொல்றீங்க. பயம்ங்க.. பேச ரொம்ப பயம் எனக்கு அப்பெல்லாம். என்னோட ஒரு தலை காதல் எப்படியோ அந்த பொண்ணுக்கு தெரிஞ்சிருச்சு. திட்டேல்லாம் கெடைக்கல. ஒரே ஒரு கோப பார்வை தான். சப்த நாடியும் அடங்கிப்போச்சு எனக்கு. +2 முடிஞ்சு போகும் போது சாந்தமா ஒரு பார்வை பாத்தாங்க. அர்த்தம் புரியல. ஆட்டோகிராப் கூட வாங்கிக்கல. போன மாசம் தான் அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆச்சுங்க, காதல் கல்யாணம் !

சரி அத விடுங்க அடுத்த லவ்வ பாப்போம். என்னோட அடுத்த லவ்வு பஸ்ல. நான் காலேஜ் படிக்கும் போது பஸ்ல தான் போய்ட்டு வருவேன். அப்போ அந்த பொண்ணும் பஸ்ல வரும். அப்போ அது +1 படிச்சுட்டு இருந்துச்சு.. நான் காலேஜ் மொதல் வருஷம். ஏஜ் வித்யாசம் எல்லாம் கரெக்டா தாங்க இருந்துச்சு..ஆனாலும் விதி வேலைய காட்டிருச்சு இந்த தடவையும். எப்படின்னு கேக்கறீங்களா ?. அதுக்கு முன்னாடி எப்படி லவ் வந்துச்சுன்னு சொல்றேன். கேளுங்க.

எப்பவும் நான் ஒரே பஸ்ல தான் போவேன், அந்த பொண்ணும் அதே பஸ்தான். அவங்க ஒக்கார எடம் இல்லன்னா ஸ்கூல் பேக்க எங்கிட்ட குடுத்து வெச்சுருக்க சொல்லுவாங்க. அந்த காரணத்துக்காகவே எனக்கு எப்பவும் ஒக்கார எடம் கெடக்கும் படி சில பல முன்னேற்பாடுகள் எல்லாம் பண்ணிவிட்டேன். அப்புறம் என்ன ஒரு தலை காதல் வேதாளம் இங்கேயும் என் இதயத்தில் ஊஞ்சல் கட்டி ஆடியது.. பாவம்ங்க அந்த பொண்ணு கூட்டத்துல நிக்க எடம் இல்லாம எங்கிட்ட பேக்க குடுக்கும். ஆனா என் கொரங்கு மனசு காதல் கொய்யாவ தேடி கண்டபடி தாவும் அந்த நேரத்திலும். எனக்கொரு சந்தேகம்ங்க....

காதல் பஸ்ல வரும், ஆனா தஸ் புஸ்னு மூச்சு வாங்கி நிக்கும் போது வருமா வராதா ??
தெளிவா பார்க்ல ஒக்காந்து பேசினா காதல் வரும், ஆனா நிக்க இடமில்லாமல் முக்கி முனகி திக்கி திணறும் போது வருமா வராதா ??
பூத்து
நிக்கும் பூஞ்சோலை பெண்ணுக்கு வேத்து பூத்து நிக்கும்போது காதல் வருமா வராதா ??

கண்டிப்பா வராதுங்க அதுக்கு நான் க்யாரண்டி.. எப்படி வரும் சும்மா பேக்க மட்டும் வாங்கி பத்திரமா வச்சுருந்தா ? எதாவது பேசினா தானே வரும். பேசினேன் நானும் ரெண்டு வருசத்துல இருபது வார்த்தைகள். ஓரளவு முன்னேற்றம் தான் எனக்கு முந்தைய காதலோடு ஒப்பிட்டா. ஆனா என்ன பண்ண அந்த பாம்பு இருபது வார்த்தை மகுடிக்கெல்லாம் மயங்காத மல பாம்பு. அது எனக்கு ரொம்ப லேட்டா தான் தெரிஞ்சுது. அந்த பொண்ணுக்கு போன வருசம்தாங்க கல்யாணம் ஆச்சு, இதுவும் காதல் கல்யாணம் !

எனக்கு ஒரு ராசிங்க, நான் யாரையெல்லாம் ஒரு தல காதல் பண்றேனோ அவங்கெல்லாம் காதல் கல்யாணம் தான் பண்ணிக்கறாங்க. உங்க ஊர்ல யாருக்காவது கல்யாணம் ஆகணுன்னா சொல்லுங்க....

அவ்வளவு தானா உன் லவ்வுன்னு கேக்கறீங்களா ? இல்லவே இல்லங்க.. இதெல்லாம் என் படிப்புலக வாழ்க்கையில் நடந்தவை. மீதிய ரெண்டாம் பாகத்துல பாப்போம்....... ரெண்டாம் பாகத்தில் கொஞ்சம் சீரியஸ் லவ் எல்லாம் இருக்குங்க. கண்டிப்பா படிக்க மறக்காதீங்க....... கூடிய விரைவில்.......

Saturday, May 10, 2008

குருவி பட விமர்சனம்.  


சமீபத்தில் குருவி படம் பார்த்தேன், அது பற்றி ஒரு சின்ன விமர்சனம்.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜயண்ட் (இந்த பேருக்கு கலைஞர் ஒண்ணும் சொல்லலீங்களா ? ஊருக்கு தான் உபதேசமா ?) பட நிறுவனம் தயாரித்த முதல் படம். கில்லி கூட்டணி மீண்டும் இது தான் படத்துக்கு கொடுக்கப்பட்ட பில்ட் அப்.

கடப்பா குவாரியில் இருந்து கொத்தடிமைகளை விஜய் மீட்பதுதான் கதை. குவாரியின் உரிமையாளர்கள் தான் வில்லன்கள் (சுமன், ஆஷிஷ் வித்யார்த்தி) விஜயின் அப்பா மணிவண்ணன் மற்றும் பலர் எப்படி குவாரியில் கஷ்டப்படுகிறார்கள் என்ற காட்சியுடன் படம் ஆரம்பிக்கிறது. மணிவண்ணன் வில்லன்களிடம் சபதம் செய்கிறார் "எம்மகன் வருவான்டா உங்கள அழிக்க". அப்போதே கதை தெரிந்து விட்டது.

விஜயின் அறிமுக காட்சி ஒரு காமெடி எப்படின்னா அவர் டிட்சில் இருந்து பொங்கி எழுந்து வருகிறார், இந்த காட்சிக்கு தியேட்டரில் சிரிப்பு சத்தம் கேட்டது. கடைசியில் சொன்னார்கள் அவர் டிட்ச் பைப்பை சுத்தம் பண்ண போனார் என்று. சூப்பர் introduction scene. அதுக்கபுறம் அவர் ரேஸ் எல்லாம் ஓட்டுகிறார் ஒரு ஓட்ட கார வெச்சுக்கிட்டு. ஜெயித்தும் காட்டுகிறார். அஜித் மாதிரியே பண்ண விஜய்க்கு ஆசை போல. விவேக் நன்றாக சிரிக்க வைக்கிறார். காமெடி ரொம்ப ஆபாசம். இரட்டை அர்த்தம் எல்லாம் இல்லை, ஒரே அர்த்தம் தான். டைரக்ட் ஆபாசம்.

அதுக்கப்புறம் கடன் காரர் வந்து மெயின் கதையை ஆரம்பிக்கிறார். எப்படின்னா மணிவண்ணன் வாங்கிய கடனை திருப்பி அடைக்க சொல்கிறார். அப்படி முடியாதுன்னா வீட்டை ஏலத்துல விட்ட்ருவேன் என்று மெரட்டுகிறார். விஜய்க்கு பொறுப்புணர்ச்சி வந்து மலேசியா போயி தன் தந்தைக்கு வர வேண்டிய பணத்தை வசூல் செய்ய குருவியாக பறக்கிறார். அங்கேயும் (சுமன்) தான் வில்லன். ஒரே ஆள்தான். கடப்பா + மலேசியா.. த்ரிஷா அவர் தங்கை. அங்கே வில்லன்களிடம் சண்டை போட்டுப்பார்கிறார் விஜய். அவர்கள் கொடுக்க முடியாது பணத்த என்கிறார்கள். அதனால் அங்கிருந்து விலையுயர்ந்த வைரத்தை அமுக்கி கொண்டு திரும்பி வர திட்டம் போடுகிறார். திருடும் போடு சில பல சாகசங்கள் செய்கிறார். அதை பார்த்து த்ரிஷா அவர் மீது காதல் கொள்கிறார். திரும்பி வரும்போது அவரும் விஜயுடன் ஒட்டிக்கொண்டு சென்னை வந்துவிடுகிறார். சுமனும் வருகிறார். த்ரிஷாவையும் வைரத்தையும் தேடி. அதுக்காக சென்னையில் நடக்கும் சண்டையின் போது சுமன் "நான் தான் உங்கப்பாவை கொத்தடிமையாக வெச்சுருக்கேன், முடிஞ்சா கடப்பா வா. " என்று சவால் விடுகிறார். த்ரிஷாவும் வைரமும் விஜயிடம் இருந்து போகிறது. நம்மாளு பொங்கி எழுந்து கடப்பா போயி சண்டை போட்டு அவங்கப்பாவையும் த்ரிஷாவையும் மீட்டாரா (அதுல என்ன சந்தேகம்) என்பது தான் கதை.

அதுக்குள்ள விஜய் படர கஷ்டம் சொல்லி மாளாது. படம் பாக்கிற நம்மளையும் அவரோடு சேத்து கஷ்டப்படுத்தி விடுகிறார்கள். செகண்ட் ஹாபில் விஜய் நடக்கறதே இல்லை. பறக்கறது மட்டும் தான். பட பேருக்கு தகுந்த மாதிரிதான் விஜய் இருக்கனுங்கர இயக்குனரின் கவனம் தெரிகிறது.

படத்தின் குறை நிறைகள்.

நிறைகள்.
....................
.. முதல் பாதி
.. விவேக் காமெடி
.. விஜய் ( ஓவரா வெயிட் கொறக்காதீங்க விஜய் அப்புறம் தனுஷ் மாதிரி ஆயிருவீங்க.)

குறைகள்.
.....................
.. இரண்டாவது பாதி.
.. ஓவர் சண்டை, எப்போ பாத்தாலும் யாரோ யார்கூடவோ சண்டை போட்டுட்டே இருக்காங்க.
.. வில்லன்கள்.
.. சம்பந்தமே இல்லாமல் வருகிற பாடல்கள்.

கில்லி மாதிரி இருக்கும்னு எதிர்பார்த்து போனா ஆப்பு தான். எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் படம் பார்க்க போனால் ஓரளவுக்கு திருப்தி அடைவீர்கள். மொத்தத்தில் இது றெக்கை முறிந்த குருவி.

Tuesday, May 6, 2008

தமிழில் திரைப்படங்களுக்கு பெயர் வைத்தால் வரிவிலக்கு என்ற திட்டம் தேவையா ?  

தமிழக முதல்வருக்கு ஒரு கடிதம்.
.......................................................................

முதல்வர் அவர்களுக்கு வணக்கம், தங்களின் ஒரு திட்டமான "தமிழில் திரைப்படங்களுக்கு பெயர் வைத்தால் வரி விலக்கு" என்ற திட்டம் குறித்து எனக்கு சில கருத்து முரண்பாடுகள் உள்ளன. அவற்றை கீழே கொடுத்துள்ளேன்.

.. கோடிக்கணக்கில் பணம் புரளும் சினிமா துறைக்கு இந்த மாதிரி வரிவிலக்கு தேவையா ? அதுவும் தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்பது தேவையா ? இப்படியெல்லாம் தமிழை வளர்க்க முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா ?

.. சினிமா துறை ஒன்றும் நலிந்து போய் கிடைக்கவில்லை. அவர்கள் எடுக்கும் மோசமான படங்கள் ஓடாததால் சினிமா துறையே நலிந்து போய் கிடக்கிறது என்று சொல்வது முட்டாள் தனம் என்பது என் கருத்து.

.. பல துறைகள் நலிந்து போய் கிடக்கிறது, உதாரணமாக விவசாயம், மற்றும் நெசவு. சினிமா துறைக்கு காட்டும் கருணையை மறற துறைக்கும் காட்டுங்கள். சினிமா துறைக்கு நீங்கள் இவ்வளவு நீங்கள் சலுகை செய்ய காரணம் நீங்கள் ஒரு சினிமா ரசிகர் என்பதாலா அல்லது சினிமா துறையினரை பிரச்சார சமயத்தில் இழுக்க இப்பொழுதே அடி போடும் ஒரு முயற்சியா ? சினிமா துறையினரின் பிரச்சாரம் பல சமயத்தில் எடுபடாது என்பது உங்களுக்கு தெரியாதா என்ன. உதாரணம் சிம்ரன் அவர்கள் "Vote for 2 leaves" என்று அழகாக இடுப்பை காட்டி வோட்டு கேட்டும் மக்கள் வேட்டு வைத்தது உங்களுக்கு மறந்து போச்சா ? ஆகவே சினிமா துறைக்கு கொடுக்கப்படும் அனைத்து சலுகைகளையும் நிறுத்துங்கள். முடிந்தால் இன்னும் வரியை அதிகப்படுத்தி அரசுக்கு அதிக வருமானம் கிடைக்க வழி செய்யுங்கள். சினிமாகாரர்கள் போராடுவார்கள், போராடட்டும் விடுங்கள். படமே எடுக்க போவதில்லை என்று அவர்கள் முடிவு செய்தாலும் கவலை இல்ல, ஆங்கில மற்றும் ஹிந்தி படங்களை பார்ப்போம். நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்.
நீங்கள் அனைத்து வரிகளும் அதிகபடுத்தினால் தான் அவர்கள் சிக்கனமாக நல்ல கதைஅம்சமுள்ள படங்கள் எடுப்பார்கள். நடிகர்களுக்கு கொடுக்கும் சம்பளமும் குறையும். கொஞ்சம் திமிரும் குறையும் எல்லா நடிகர்களுக்கும்.

நீங்கள் வரி விலக்கு கொடுத்து தான் தீருவேன் என்றால் கீழ்க்கண்ட வழிகளில் கொடுங்கள்.

... தமிழில் பெயர் வைக்காவிட்டால் இரட்டை வரி (இரு மடங்கு வரி), தமிழில் பெயர் வைத்தால்தான் சாதாரண வரி.
.. படங்களில் வரும் பாடல்கள் அனைத்தும் பிறமொழி கலப்பில்லாமல் தமிழில் இருக்க வேண்டும். அப்படி இல்லையெனில் இரட்டை வரி. எல்லா பாடல்களும் பிறமொழி கலப்பில்லாமல் இருந்தால் சாதாரண வரி. இப்படி செய்தால் தமிழ் வளர நிறைய வாய்ப்பிருக்கிறது.
.. ஆபாசமான வரிகளுடன் பாடல் இருந்தால் இரட்டை வரி . இல்லையென்றால் சாதாரண வரி.
.. படம் முழுதும் பிற மொழி கலப்பில்லாமல் வசனம் தமிழில் மட்டும் இருந்தால் 20 % வரிவிலக்கு.

மேல சொன்ன திட்டங்களை நீங்கள் அமுல்படுத்தினால் அரசின் வருமானமும் உயரும், நல்ல சினிமாவும் வரும், தமிழும் வளரும்.

ஆகவே, தாங்கள் இந்த கருத்துகளை சிறிது கவனிக்க வேண்டுகிறேன்.

நன்றி.

Monday, May 5, 2008

ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேறுமா ?  

போன மாசம் முழுசும் இதே செய்தி தான் வலம் வந்து கொண்டிருந்தது. நடிகர்கள் முதல் அரசியல் கட்சிகள் வரை அனைவரும் இதை ஆதரித்தும் எதிர்த்தும் அங்கும் இங்கும் பிரசாரம் செய்து கொண்டிருந்தார்கள். இந்த திட்டம் இந்த ஜென்மத்தில் நிறைவேறுமா என்று ஒரு சிறிய அலசல்.
... இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் கலைஞரின் அலட்சியம். பத்து வருசத்துக்கு முந்தி கலைஞர் ஆட்சியில் இருந்த போதுதான் இந்த திட்டத்திற்கு கர்நாடக அரசு ஓகே சொன்னது. அப்பொழுதே நிறைவேற்றி இருந்தால் இப்போது இந்த பிரச்சனை வந்தே இருக்காது. அலட்சியத்துக்கு சொல்ல பட்ட காரணம் கஜானா காலி பணம் இல்ல திட்டதை நிறைவேற்ற என்பது தான். ஒரு ஆயிரம் கோடி தமிழ்நாட்டு கஜானால இல்லையா அப்போ ? நம்ப முடியல கலைஞர் அய்யா.
... சரி கலைஞர் ஆட்சி முடிஞ்சு அம்மா ஆட்சி வந்துச்சு, அவங்க இந்த திட்டத்தை வழக்கம் போல கிடப்பில் போட்டுட்டாங்க, ஒரே காரணம் அது கலைஞர் ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அவங்களாவது விழித்துக்கொண்டு திட்டத்தை நிறைவேற்றினார்களா என்றால் அதுவும் இல்லை.
... இப்போது கர்நாடக தேர்தல் நேரத்தில் கலைஞர் மறுபடியும் இதை தூசு தட்டினார். கர்நாடக வெறு வாய்களுக்கு அவுல் மெல்ல கொடுத்தார். மீதி நடந்தது அனைவருக்கும் தெரியும்.
... இப்போது இந்த திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் எந்த அரசு அமைந்தாலும் நடக்க போவது இதுவே.
-> சட்ட மன்றத்தில் தீர்மானம் போடுவார்கள் திட்டத்தை நிறுத்த சொல்லி.
-> கேஸ் உச்ச நீதி மன்றம் போகும்
-> கொறஞ்ச பட்சம் ஒரு பத்து வருஷம் கேஸ் நடக்கும்
-> அப்புறம் தமிழகத்துக்கு ஆதரவா தீர்ப்பு வரும். பிரச்சனை நடக்கும் இங்க. தமிழர்கள் தாக்கப்படுவார்கள்.
-> திரும்ப கேஸ் நடக்கும்

ஆகவே திட்டம் நிறைவேற வாய்ப்பே இல்லை. கர்நாடக அவுல் திண்ணிகள் விட மாட்டார்கள்.

கலைஞரோ, ஜெயலலிதாவோ இந்த திட்டம் நிறைவேறும் பொது கண்டிப்பாக ஆட்சியில் இருக்க மாட்டார்கள். கலைஞரின் கொள்ளு பேரனோ, அம்மாவினால் வாரிசாக்கபட்டவர்களின் பேரன்களோ ஆட்சியில் இருப்பார்கள் என்பது என் தாழ்மையான கருத்து.

யாரும் ஏமாந்தவர்கள் இல்லை இந்த பிரச்சினையில், தர்மபுரி கிருஷ்ணகிரி மக்களை தவிர......

நடிகர்கள் திரையில் புகைபிடிப்பது சரியா ??  

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ரொம்ப நாளாகவே நடிகர்களின் மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறார் எதாவது ஒரு காரணத்தை சொல்லி. அவற்றை விரிவாக பார்ப்போம்.

அவர் சொல்வது என்னவென்றால் நடிகர்கள் திரையில் தோன்றும் போடு மது, புகைபிடிப்பது போன்ற காட்சிகளில் தோன்ற கூடாது அப்படி செய்தால் ரசிகர்கள் அதன் மூலம் கெட்டு தவறான வழிக்கு போகிறார்கள் என்பது தான். இது ஓரளவுக்கு சரி, சில சமயங்களில் படிக்காத பாமர ரசிகன் தான் தலைவன் திரையில் செய்வதை நேரில் செய்து பார்க்க ஆசைப்படுகிறான். அதனுடைய பின் விளைவுகளை பற்றி அவன் யோசிப்பதில்லை. ஆனால் பெரும்பாலான சமயங்களில் ரசிகனுக்கு தெரியும் எது சரி எது தவறு என்று. நடிகர்கள் திரையில் புகைப்பதால்தான் எல்லாரும் புகைபிடிக்கிறார்கள் என்பது இல்லை, அதே மாதிரி நடிகர்கள் புகைபிடிப்பதை விட்டு விட்டால் அனைவரும் புகைபிடிப்பதை நிறுத்தி விடுவார்கள் என்றும் சொல்லமுடியாது.

உதாரணமாக சில வருடங்களுக்கு முன் ரஜினி இனி திரையில் புகைப்பிடிப்பது போல வரும் காட்சிகளில் நடிக்கமாட்டேன் என்று அறிவித்தார். அவர் அப்படி செய்த உடனே புகை பழக்கம் உள்ள அவர் ரசிகர்கள் அனைவரும் இனிமேல் புகை பிடிக்கமாட்டேன் என்று அறிவித்தார்களா ? இல்லையே. அதனால் புகை பிடிப்பதும் பிடிக்காததும் அவரவர் விருப்பம். நடிகர்கள் செய்கிறார்கள் என்று யாரும் செய்வதில்லை பொதுவாக.

திரையில் செய்வதெல்லாம் நேரில் ரசிகர்கள் செய்வார்கள் என்ற வாதம் ஆதாரமற்றது. திரையில் கற்பழிப்பு காட்சிகள் நிறைய வருகிறது, அதை பார்த்து அதே மாதிரி எல்லாரும் செய்கிறார்களா? இல்லை திரையில் பறந்து பறந்து சண்டை போடுவது போல நேரில் யாராவது செய்கிறார்களா? இல்லவே இல்லை.

ஆகவே அன்புமணி ஐயா சொல்வது ஒரு சுய விளம்பரத்துக்காக என்று எனக்கு தோன்றுகிறது. அவருடைய நோக்கம் யாரும் புகை பிடிக்கக்கூடாது என்பது என்றால் ஏன் அவர் சிகரட், மது உற்பத்தி நிறுவனங்களுக்கு தடை போடக்கூடாது ? அதை செய்ய உங்களால் முடியுமா அன்புமணி அவர்களே ?

ஒரு நடிகர் திரையில் தோன்றும் போது காட்சியமைப்புக்காக புகை பிடிப்பதை போலவும் மது அருந்துவதை போலவும் காட்டுகிறார்கள். அது தப்பே இல்லை. சினிமா முழுதுமே பொய் அதில் அவர்கள் செய்வது மட்டும் உண்மை என்றால் அது என்ன நியாயம் ?

இந்த மாதிரியெல்லாம் தடை போட்டால் தமிழ் சினிமாவில் வசந்த மாளிகை, வாழ்வே மாயம் போன்ற படங்கள் வரவே வராது. ஆகவே இயக்குனர்களின் கற்பனைக்கு தடை போடுவதை அன்புமணி ஐயா நிறுத்தி கொள்வது நல்லது இல்லையென்றால் அவர் செய்வது ஒரு பப்ளிசிட்டி ஸ்டண்ட் என்று மக்களுக்கு தெரிந்துவிடும்.

நன்றி.

Sunday, May 4, 2008

எம்.டி.வியின் அநாகரிகம்.  

தற்செயலாக எம்.டி.வி பார்க்க நேர்ந்தது. அதில் Roadies 5.0 என்ற ஒரு நிகழ்ச்சியை பார்த்தேன். அது ஒரு reality show. வெள்ளக்காறன பாத்து அதே மாதிரி நம்மூர் சேனல்கள் காப்பி அடிக்கும் இன்னொரு நிகழ்ச்சி. நான் பார்த்த போது தண்ணீரில் விளையாடும் ஒரு விளையாட்டை அதில் கலந்துகொண்டவர்கள் பண்ண வேண்டுமென்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சொல்ல்லி கொண்டிருந்தார். மூணு பொண்ணுகளும் ரெண்டு பசங்களும் இருந்தார்கள். சரி என்ன தான் பண்றாங்கன்னு பாப்போம்னு வெயிட் பண்ணேன் . அதில் கலந்துகொள்ள அந்த பெண்கள் போட்டிருந்த ஆடை என்ன தெரியுமா ? குட்டி பாவாடையும் மேல ஒரு துண்டு துணியும் தான். முழு தொடையையும் வயிரையும் காட்டி கொண்டு பப்பரபே என்று சிரித்தார்கள். ஒருங்கிணைப்பாளர் ஒரு கருப்பு கண்ணாடி போட்டு கொண்டு ரசித்து கொண்டிருந்தார். ஆண்கள் வெறும் ஜட்டி மட்டும் போட்டு வேற்று உடம்பை காட்டி கொண்டு இருந்தார்கள். இந்திய கலாச்சாரம் அங்கே சிரியாய் சிரித்து கொண்டிருந்தது. சியர் லிடர் பெண்கள் போடும் ஆட்டத்தை தடை செய்ய சொன்ன கலாசார பாதுகாவலர்கள் இப்போ எங்கோ போனார்கள் ? யாருக்கு தெரியும். வாழ்க கலாச்சாரம்.

அடுத்து ரம்பத்தில் பலகையை அறுக்கும் சவால். என்னன்னா ஒரு பலகையின் மேல போட்டியாளரை படுக்க வைத்து அந்த பலகையை இயந்திரம் கொண்டு அறுப்பார்கள். அப்போது போட்டியாளர் கை கட்ட பட்டிருக்கும். அந்த பலகையை மெஷின் அறுத்து முடிக்கறதுக்குள்ள கை கட்டை அவிழ்க்க வேண்டும். அதுதான் போட்டி. அப்போதும் அந்த பெண்கள் அதே ஆடை தான் அணித்து இருந்தார்கள் என்பது இங்கே முக்கியமான விசியம். அவர்கள் படுத்திருக்கும் போது அந்த மாதிரி குட்டி ஆடைகள் போட்டிருந்தால் எப்படி இருக்கும்.. மீதியை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன். எனக்கு வர்ணிக்க ஆசை தான் பெண் வாசகர்கள் கோபித்து கொள்வார்கள் அதனால் நீங்களே கற்பனை பண்ணிகொள்ளுங்கள். இதையெல்லாம் குழந்தைகள் ட்ரை பண்ண கூடாதுன்னு ஒரு வார்னிங் கூட போடலங்க.

என்ன கேக்க வரேன்னா இந்த மாதிரி தொலைகாட்சி நிகழ்ச்சியைஎல்லாம் யார் நெறியாள்கை(Moderate & Monitor) செய்கிறார்கள் ? எந்த ஹிந்தி சேனல் பாத்தாலும் ராக்கி சாவந்த் குட்டி பாவாடையுடன் கெட்ட ஆட்டம் போடுகிறார். அதோடு ஒப்பிட்டால் cheer leaders ஆட்டம் ரொம்ப கம்மி. தமிழ் சேனல்கள் மட்டும் சளைத்தவர்களா ? விஜய், சன், கலைஞர், ஜெயா என எந்த ஒரு சேனல்-உம் விதி விலக்கல்ல. எங்க பாத்தாலும் யாரோ ஒரு ஜட்ஜ் யாரோ ஒரு போட்டியாளருக்கு வித விதமாக தீர்ப்பு சொல்லிக்கொண்டே இருக்கிறார். வெறுத்து போச்சுங்க. அதே மாதிரி இந்த சீசன் 1, 2, 3 காமெடி நிகழ்ச்சிகள். கடியோ கடிங்க. இதையெல்லாம் மொதல்ல தடை பண்ணனுங்க.

என்ன பொறுத்த வரையில் நல்ல வித்யாசமான ஓரளவு பயனுள்ள ரசிக்கும் படியான நிகழ்ச்சிகளாக கீழ்க்கண்டவைகளை சொல்வேன்.
.... நாணயம் 1000 (சன் டிவி)
.... நீயா நானா (விஜய்)
.... தமிழ் பேச்சு எங்கள் மூச்சு (விஜய்)
.... இப்படிக்கு ரோஸ் (விஜய்)
.... லொள்ளு சபா (விஜய்)
.... பேச்சு பேச்சா தான் இருக்கணும் (ராஜ்)

எதுக்குமே புரயோஜனம் இல்லாத நிகழ்ச்சிகள்.
.... ஆடல் நிகழ்ச்சிகள் (எல்லாத்துலயும் தான்)
.... காமெடி நிகழ்ச்சிகள் (எல்லாத்துலயும் தான்)
.... படங்களை rating போடும் நிகழ்ச்சிகள் (எல்லாத்துலயும் தான்)
.... மெகா தொடர்கள் ( எல்லாத்துலயும் தான்)

ஸ்கின் ஷோ அதாவது தோலை காட்டுவது ஓரளவுக்கு ஓகே தான். ஆனா அதையே எந்நேரமும் காட்டி கொண்டே இருந்தால் கடுப்பு தான் வரும். சேனல் மூளைக்காரர்கள் புரிந்து கொள்வார்களா ? நல்ல தரமுள்ள அனைவரும் குடும்பத்தோடு உக்காந்து பாக்கற மாதிரி நிகழ்ச்சிகள் மட்டும் வந்தால் எவ்ளோ நல்லா இருக்கும்? ஸ்கின் ஷோ நிகழ்ச்சிகளுக்கென்று தனியாக ஏன் சேனல் தொடங்க கூடாது ? அப்படி பண்ணிட்டா பெற்றோருடன் டிவி பாக்கும் போது நல்ல சேனல் களும் அவர்கள் இல்லாத போது ஸ்கின் ஷோ சேனல் களும் பார்ப்பார்களே வயசு பசங்கள். எப்படி ஐடியா ?

Saturday, May 3, 2008

வோடாபோன் நாய் குட்டியும், விலங்குகள் நல வாரியமும்.....  

நேற்று ஒரு செய்தி, வோடாபோன் நாய் குட்டி விளம்பரத்தை தடை செய்ய வேண்டும் என்று விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு வழக்கு பதிவு செய்து இருப்பதாக தெரிகிறது. இதை கேள்வி பட்டதும் எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. அதுக்கு அவர்கள் சொன்ன காரணம் "அந்த நாயை கொடுமை படுத்தி நடிக்க வைத்திருக்கிறார்களாம், அப்புறம் எந்த ஒரு நாயும் பஸ் பின்னால் தானாக ஓடதாம் , அதை கட்டாய படுத்தி ஓட வைத்திருக்கிறார்களாம். " காரணம் எப்படி இருக்கு ? சூப்பர் ல. ஒக்காந்து யோசிப்பாங்களோ காரணம் தேடி.

விலங்குகள் அமைப்புக்கு சில கேள்விகள்... பதில் வராவிட்டாலும் கேள்வி கேட்பது தான் இந்த ப்ளாகின் நோக்கம்.
.... நீங்க சொல்ற மாதிரி நாய கட்டாய படுத்தி ஓட வெச்சுருந்தா அது அவ்ளோ சந்தோசமா ஓடுமா ?
.... கட்டாய படுத்தி ஓட வெச்சாங்கன்னு உங்ககிட்ட என்ன ஆதாரம் இருக்கு ?
.... இவ்ளோ நாளா எங்க போனீங்க ? இதே விளம்பரம் கிட்டத்தட்ட மூணு மாசமா வருது. திடீர் நனோதயம் ஏன் ?
.... இதுக்கு முன்னாடி ஹட்ச் விளம்பரத்துல கூட இதே நாய் தான் வந்துச்சு.. அப்போ ஏன் கேஸ் போடல ? அப்போ தூங்கிட்டா இருந்தீங்க ?
.... இது யாரோ தூண்டி விட்ட மாதிரி இருக்கு. ஆனா ஒன்ன மட்டும் சொல்றேன். அந்த விளம்பரத்துக்கே செம விளம்பரம் தேடி தந்துடீங்க. இனிமே தான் அந்த விளம்பரத்தோட reach அதிகம் ஆகும்.
.... என்ன பொறுத்த வரையில் நாயின் முன்னாடி எலும்பு துண்ட காட்டி தான் ஓட வச்சுருப்பாங்கன்னு சொல்வேன், அது ஓடற சந்தோசத்த பாத்தா அப்படி தான் இருக்கு.
.... இப்போ நீங்க கேஸ் போட்டது எலும்பு துண்ட காட்டி ஓட விட்டு அப்புறம் குடுக்காம ஏச்சு புட்டாங்கன்னு அந்த நாய் உங்க கிட்ட வந்து சொன்னதாலா ? இல்ல அப்படி குடுக்காம விட்டுட்டோம்னு அந்த விளம்பரத்தை எடுத்தவங்க வந்து உங்க கிட்ட தன்னிலை விளக்கம் குடுக்காம விட்டதாலா ?
.... இது எனக்கு ரொம்ப வித்யாசமா இருக்கு, அந்த விளம்பரம் பாத்தாலே ஒரு வித புத்துணர்ச்சி வருவது உண்மை. Its a refreshing ad..

அப்புறம் இந்த மாதிரி மொக்க கேஸ் போட்டு கற்பனைய கட்டி போடாதீங்க. நீங்க இந்த விளம்பரத்துக்கு தடை வாங்கிட்டா ஊருல இருக்கற தெரு நாய் தொல்லை நின்று விடுமா ? எந்த ஒரு நாயும் பஸ் பின்னாலோ சைக்கிள் பின்னாலோ ஓடாதா ? இதெல்லாம் நடக்கும்னு உங்களுக்கு உறுதியா தெரியும்னா தடை வாங்குங்க.

இதே மாதிரி தான் இம்சை அரசன் படத்துக்கு கேஸ் போட்டாங்க. காரணம் - குதிரை மேல ஏறி சவாரி செய்தாராம் வடிவேலு. என்னங்க இது சின்ன புள்ள தனமா இருக்கு ராஜா குதிரைல போகாம பின்ன எப்படி போவாரு. FYI அந்த காலத்துல வண்டி வாகனம் எல்லாம் இல்ல. அதுனால ராஜா படம் எடுத்த குதிரைல போற மாதிரி தான் காட்ட முடியும்.

உங்களுடைய அடுத்த இலக்கு எனக்கு தெரியும். அடுத்து நீங்க எந்த ஒரு விவசாயும் மாடு வெச்சு ஒலவு ஓட்டக்கூடாது வண்டி ஓட்ட கூடாதுன்னு சொல்வீங்க. அதுதானே ? அப்புறம் பால் கறக்க கூடாதுன்னு கூட நீங்க சொல்லலாம், because எந்த ஒரு மாடும் அதுவே பால குடுக்கரதில்ல நாமே தான் கறக்கிறோம் அதனால அதுக்கு வலிக்குது அப்படி எப்படின்னு எதாவது சொல்லுங்க கேஸ் நிச்சயம் கெடக்கும். ஆனா என்ன அப்புறம் பாலுக்கு பதிலா எத குடிப்பீங்க ? டீ எப்படி போடுவீங்க, தயிர் எப்படி கிடைக்கும். பதில் சொல்லுங்க விலங்குகளே ஸாரி விலங்குகள் நல வாரியமே...

அடுத்து நீங்க கொசுவர்த்தி விளம்பரம், எலி மருந்து விளம்பரம், கரப்பான்பூச்சி கொள்ளி விளம்பரம் ஆகியவற்றை தடை செய்ய கேஸ் போடலாம் என்று என் நண்பர் ஒருவர் சொன்னார். அவர் சொன்னது சரி. அந்த மாதிரி விளம்பரத்துல அதை கொல்ற மாதிரி காட்டுராங்கல்ல. அப்போ கொசுவும் எலியும் வருத்த படாதா ? அந்த விளம்பரத்தில் வர மாதிரி நம்மையும் கொன்னு போட்ட்ருவாங்கன்னு அது பயந்து சாகாதா ? அப்படி பயந்து அதுக்கு மன அழுத்தம் ஆகி பைத்தியம் புடுச்சா அதுக்கு நீங்களா ஆஸ்பிடல் செலவு பண்ணுவீங்க ??

இந்த மாதிரி முட்டாள்கள் விலங்குகள் நல வாரியத்தில் இருந்தால் யாருக்கும் நல்லதில்லை. கலைஞர்களுக்கும் சரி மக்களுக்கும் சரி. எவ்ளோ விலங்குகள் ரோட்டில் அடி பட்டு சாகுது அத மொதல்ல சரி பண்ணுங்க அப்புறம் மத்தத பாருங்க...

Thursday, May 1, 2008

பெங்களூர் வாழ்க்கை......  

நண்பர்களே, என்னோட மூணு வருஷ பெங்களூர் அனுபவத்த உங்களோட பகிர்ந்து கொள்ள எனக்கு ரொம்ப ஆசை. அந்த ஆசை இப்போ நிறைவேருது....

பெங்களூர் என்ன பொறுத்த வர பெண்களூர். Because எங்க பாத்தாலும் பொண்ணுக தான் கலர் கலர் டிரஸ் போட்டுட்டு சுத்தறாங்க. சில நேரங்களில் அரை நிர்வாணமா சுத்தறாங்க. இந்த நகரம் ஒரு கலாச்சார சீர்கேட்டுக்கு முன்னுதாரணம். எல்லாம் பாத்து பாத்து போரடிசுருச்சு அதான் கலாச்சாரம் பத்தி பேச வேண்டிய கட்டாயம் எனக்கு. இந்த ஊருக்குன்னு ஒரு தனிப்பட்ட கலாச்சாரம் கெடயாது. இங்க இருக்கற பாதி பேரு தமிழ், மீதி ஹிந்தி, மலையாளம், தெலுங்கு பேசற மக்கள். இப்படி பல மொழி பேசற மக்கள் இருக்கறதால இந்த ஊரோட Individuality போச்சு. இந்த ஊரு மக்கள் டிராபிக் ஜாம்ள மாட்டி முழி பிதுங்கி சாகறாங்க. குமாரசாமியும் எட்டியுரப்பாவும் இதையெல்லாம் கவனிக்க போவதில்லை என்று சபதம் போட்டிருப்பதாக கேள்வி . நாம என்ன பண்ண, நாமளே இங்க நாடோடிகள். ரொம்ப பேசினா அடிதான்.

பத்து வருசத்துக்கு முன்னாடி எல்லாம் காடு மாதிரி இருந்த ஊராம். 95 ஆம் ஆண்டுக்கு முன்னால் இப்போ நாங்க இருக்கற பகுதியில எல்லாம் கொய்யா தோப்பாம். கேள்வி பட்டேன். அப்படி இருந்த ஊரு இப்போ எங்க பாத்தாலும் வண்டி, டிராபிக், புகை. அவ்ளோ தான்... அத தவிர இந்த ஊர்ல ஒன்ணுமே இல்லங்கற மாதிரியான எண்ணம் எனக்கு அடிக்கடி வரும்.

இவ்வளவு மாற்றம் இந்த ஊருக்கு வர காரணம் சாப்ட்வேர் ன்னு எல்லாருக்கும் தெரியும். அப்படியே drastic மாற்றம் குறுகிய காலத்துல. அதனால தான் இவ்ளோ டிராபிக் வர காரணம். இங்க இருக்கற அடிப்படை கட்டமைப்புகள் 10 ஆண்டுகள் முன்னால் இங்கே இருந்த மக்கள் தொகையின் அடிப்படையில் உள்ளது. அது தான் பிரச்சனை. இப்போ எல்லாமே கஷ்டம், ரோடு போடவும் முடியாது, மக்கள் ஆபீஸ் போகவும் முடியாது. எங்க எடம் இருக்க ரோடு போட ??

நாம ஒண்ணும் பண்ண முடியாது, பேசாம ஊர காலி பண்ணிட்டு சென்னை, கோயம்புத்தூர் மாதிரி எங்கயாவது போறது ரொம்ப நல்லது. கோயம்புத்தூர், சென்னையும் இதே மாதிரி ஆகும் சரியா பிளான் பண்ணாம விட்டா. தமிழக ஆட்சியாளர்கள் இப்போதே விழித்துக்கொள்வது நல்லது. பாப்போம்.

இன்னும் நிறைய விசியங்கள் இருக்கு இந்த ஊர பத்தி பேச. ஒவ்வொன்னா பாப்போம்..
...... ஓரளவுக்கு நல்ல வானிலை வருடம் முழுதும், இந்த வருஷம் பயங்கர வெய்யில். தாங்க முடியல. சென்னை மாதிரியே இருக்கு. வருஷா வருஷம் 2 டிகிரி அதிகம் ஆகுதாம். அதை நல்லாவே உணர முடியுது. போன வருஷம் வெயிலே இல்ல. இந்த வருஷம் ரொம்ப கஷ்டம்ங்க. தினக்கூலிக்கு போறவங்களுக்கு தான் ரொம்ப கஷ்டம். நாமெல்லாம் அதிர்ஷ்டகாரர்கள். அதை இந்த வெயிலால் மறுபடி உணர்ந்தேன் நான்.
...... தண்ணீர் பிரச்சனை இல்லவே இல்ல. இங்குள்ளவர்கள் தண்ணீரை அதிகம் வீணாக்குகிறார்கள். கொஞ்சம் சிக்கனமாக செலவு பண்ணி அதை தமிழக அல்லது கர்நாடக விவசாய்கள் பயன்படுத்த தந்தால் விவசாய உற்பத்தி இன்னும் கொஞ்சம் அதிகம் ஆகும். பண வீக்கம் பற்றி கால் மேல் கால் போட்டு புலம்பிக்கொண்டு இருப்பது கொஞ்சம் குறைய வாய்ப்பிருக்கிறது. நண்பர்களே நாமும் கொஞ்சம் சிக்கனமாக தண்ணீரை செலவு பண்ணுவோம். காவிரியை நம்பியுள்ள குடியானவர்களை எண்ணி பார்ப்போம்.
...... தமிழர்களுக்கு இங்கே ஒருவித பாதுகாப்பின்மை இருப்பது உண்மை. அதுக்கான காரணம் உங்க எல்லாருக்கும் நல்லாவே தெரியும். காவிரியும் அது சார்ந்த கிளை பிரச்சனைகளும் தான் இங்க இருக்கற சில முன்னேற துடிக்கும் அரசியல்வாதிகளுக்கு வரப்ப்ரசாதமாக இருக்கிறது. அந்த பிரசாதத்தை அனைத்து அரசியல் வாதிகளும் முடிந்த வரை உண்டு வருகிறார்கள். அளவுக்கு மீறி பிரசாதம் உண்டால் சில பல 'பின்' விளைவுகள் உண்டாகும் என்பது இங்கிருப்பவர்கள் கூடிய சீக்கிரம் புரிந்து கொள்வார்கள். கர்நாடக மக்கள் நல்லவர்கள் பொதுவாக, அவர்கள் உணர்வை தூண்டி அதில் அரசியல் செய்வது இங்குள்ள அரசியல்வாதிகள் தான். கர்நாடக தோழர்களே, எது நல்லது என்று நீங்கள் முடிவெடுக்க நேரம் வந்துவிட்டது. சிந்தியுங்கள். தமிழர்களை நிம்மதியாக இங்கே வாழ விட உதவுங்கள்..
...... பொழுது போக்குக்கு இங்கே இடங்கள் ரொம்ப குறைவு, அந்த சோகத்தை pub களில் போக்கி கொள்ள சொல்லி அரசு உத்தரவு வந்திருப்பதாக கேள்வி. நான் கேள்விப்பட்ட பெங்களூர் இரவு வாழ்வை பற்றி இன்னொரு நாள் விரிவா பாப்போம். ஆர்வத்தை அடக்கி கொள்ளுங்கள் நண்பர்களே.....

பங்குகள் ஒரு அறிமுகம் - பகுதி 1 .  

நண்பர்களே நான் முன்னமே சொன்ன மாதிரி ஸ்டாக் மார்க்கெட் பத்தி அடிக்கடி பேசுவோம், அந்த வரிசையில் இன்று ஸ்டாக் பற்றி ஒரு அறிமுகம். இந்த கட்டுரை ஸ்டாக் மார்க்கெட் பற்றி எதுவுமே தெரியாதவர்களுக்கு ஓரளவுக்கு உதவி செய்யும் என்று நம்புகிறேன்.

ஸ்டாக் என்றால் என்ன ?
..... ஸ்டாக் என்றால் ஷேர், அதாவது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் பங்குதாரர். நீங்கள் எவ்வளவு ஷேர் வாங்குகிறீர்களோ அந்த அளவுக்கு அந்த நிறுவனத்தில் நீங்கள் பங்குதாரர். என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா ? ஆம். உதாரணமாக நானும் நீங்களும் சேர்ந்து ஒரு நிறுவனம் ஆரம்பிக்கிறோம் என்று வைத்து கொள்ளுங்கள். கூட்டு நிறுவனத்துக்கு தேவையான மொத்த முதலீடு ஒரு லட்சம். நான் 25 ஆயிரம் போடுகிறேன் நீங்கள் மீதி 75 ஆயிரம் போடுகிறீர்கள் என்று வையுங்கள். இப்போ அந்த நிறுவனத்தில் யாருக்கு மதிப்பும் முடிவெடுக்கும் அதிகாரமும் அதிகம் ? அதிக பணம் போட்ட உங்களுக்கு தானே. இப்போது நான் இன்னும் கொஞ்சம் அதிகம் பணம் போட்டு அதாவது இன்னும் 25 ஆயிரம் போட்டால் இருவரும் சம உரிமை உள்ள உரிமையாளர் ஆகிவிடுவோம். இந்த கோட்பாட்டின் அடிப்படையில் தான் முழு பங்கு சந்தையும் இயங்குகிறது.
நீங்கள் ஒரு நிறுவனத்தில் 51 விழுக்காடு பங்கு வாங்கி விட்டால் நீங்கள் சொல்லாமல் அந்த கம்பெனியில் எதுவும் நடக்காது. நீங்கள் கம்பெனி ஓனர் ஆகி விடுவீர்கள். நீங்கள் வைத்திருக்கும் பங்கு அளவை பொறுத்து உங்கள் பவர் அதிகரிக்கும் அந்த நிறுவனத்தில்.

பங்கு விற்பனை எப்படி நடை பெறுகிறது ?
..... இந்தியாவில் இரண்டு பெரிய exchanges உள்ளன. Bombay Stock Exchange(BSE) and National Stock Exchange(NSE). பாம்பே மற்றும் தேசிய பங்கு சந்தைகள். இவர்களை கட்டு படுத்த Securities and Exchange Board of India (SEBI) உள்ளது. இந்த பங்கு சந்தைகள் மூலமாகத்தான் நாம் பங்குகளை வாங்கவோ விற்கவோ முடியும். பங்கு விற்பனை Demand - Supply என்ற கோட்பாட்டின் படி இயங்குகிறது. நீங்கள் ஒரு நிறுவனத்தின் பங்குகளை ஒரு குறிப்பிட்ட விலையில் வேண்டும் என்று சொன்னால் அதை நீங்கள் பெற நீங்கள் கேட்க்கும் விலையில் விற்க யாராவது தயாராக இருக்க வேண்டும். இது தான் அடிப்படை.

நிதி திரட்டல் என்றால் என்ன ?
..... எந்த ஒரு நிறுவனத்துக்கும் வளர்ச்சி தான் முக்கியம், அது இல்லையென்றால் தொழில் நடத்த வேண்டிய அவசியமே இல்லை. சிலர் இருப்பதே போதும் என்று இருப்பார்கள். அப்படி இருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு மேலே போக முடியாது. போதும் என்று அம்பானி நினைத்திருந்தால் இவ்வளவு பெரிய ரிலையன்ஸ் சாம்ராஜ்யம் வந்தே இருக்காது. So வளர்ச்சி தான் முக்கியம் அது மூளையானாலும் எதோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு கம்பெனி ஆனாலும்.. சரி எப்படி நிறுவனத்தை வளர்ப்பது ? தண்ணி ஊத்தி மரத்தை வளர்க்கற அதே Technique தான். கம்பெனி வளர மிக முக்கியம் நிதி ஆதாரம் மற்றும் தெளிவான நிர்வாக அணுகு முறைகள்.
நிதி திரட்ட நிறைய வழிகள் இருக்குது, அதுல சில.
.. கடன் வாங்கி தொழிலை விரிவு படுத்துவது.
.. கைமாத்து வாங்குவது.
.. சொத்துக்களை விற்று நிதி ஆதாரத்தை பெருக்குதல்.
.. மாமனாரிடம் மிரட்டி வாங்குவது
.. பங்கு சந்தையில் நிதி திரட்டுதல்.

இதுல எது ரொம்ப சுலபம். சொல்லுங்க பாப்போம். It depends on person to person. ஆனால் நிதி திரட்ட உலக அளவில் அனைத்து நிறுவனங்களும் பின்பற்றும் மிக முக்கிய வழி பங்கு சந்தை தான். நிதி திரட்ட வேண்டுமானால் அதற்கு முதலில் நிறுவனத்தை பப்ளிக் கம்பெனி ஆக மாற்ற வேண்டும், அதற்கு Initial Public Offering (IPO) என்று பெயர். ஒரு நிறுவனம் பப்ளிக் லிமிடெட் ஆனால் நிறைய நல்லது கெட்டது இருக்கிறது. அது இப்போதைக்கு வேண்டாம். பிறகு பார்ப்போம். ஆனால் அதன் மூலம் நிதி திரட்டி கம்பெனியை வளர்க்கலாம் என்பது மிக முக்கிய கருத்து இங்கே. எப்படி என்றால் உங்கள் நிறுவனத்தின் குறிப்பிட்ட அளவு பங்குகளை நீங்கள் வெளி ஆட்களுக்கு விற்று அதன் மூலம் வரும் பணத்தை கொண்டு நிறுவனத்தை வளர்க்கும் திட்டங்களை நிறைவேற்றலாம். இதன் மூலம் உங்களுக்கு எந்த விதமான பாதிப்பும் வராது Because நீங்கள் அனைத்து பங்குகளையும் வெளி ஆட்களுக்கு விற்கவில்லை. ஒரு குறிப்பிட்ட பங்குகளை மட்டுமே விட்கிறீர்கள். அதனால் முடிவெடுக்கும் அதிகாரம் உங்கள் கையில் தான் இருக்கும். புரிகிறதா நண்பர்களே ?

சென்செக்ஸ் மற்றும் நிப்டி என்றால் என்ன ?
..... சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் புகழ் பெற்ற இண்டெக்ஸ் கள் அல்லது List of companies from different sectors. இந்த புள்ளிகளின் அடிப்படையில் தான் நாட்டோட வளர்ச்சி கணக்கிடப்படுகிறது. இதில் இடம் பெரும் கம்பெனிகள் எல்லாமே மிக பெரியவை. அவரவர் துறையில் பெரியவர்கள். இவர்களின் வளர்ச்சியை கொண்டே ஒட்டு மொத்த துறையின் வளர்ச்சி கணக்கிடப்படுகிறது. இப்போ சென்செக்ஸ்ய் எடுத்து கொள்வோம், அதுல 30 ஸ்டாக் இருக்கு. இப்போ அந்த குறிப்பிட்ட 30 ஸ்டாக் உம் விலை அதிகம் ஆனால் சென்செக்ஸ் ம் பச்சையில் முடியும் அப்படின்னு இப்போதைக்கு தெரிஞ்சு வெச்சுக்கோங்க. பின்னாடி விளக்கமா பாப்போம்.

பங்குகளை வாங்க தனி நபர் என்ன செய்ய வேண்டும் ?
..... முதலில் Demat கணக்கு வேண்டும். இதன் மூலம் தான் பங்குகளை வாங்கி வைத்திருந்து விற்க முடியும். இது ஒண்ணும் ராக்கெட் சயின்ஸ் இல்லை. இது வெறும் எண் தான். இதை நீங்கள் நிறைய புரோக்கர் மூலமாக பெற முடியும். ஆனால் தற்போது ஆன்லைன் ஷேர் பரிவர்த்தனை ரொம்ப பிரபலம், icicidirect.com போன்ற நிறைய ப்ரோக்கர்கள் இணைய தளம் வழியாக ஷேர் வாங்கி விற்கும் வசதியை தருகிறார்கள். நீங்கள் சாப்ட்வேர் துறையில் இருந்தால் இந்த மாதிரி இணைய தளத்தில் உறுப்பினர் ஆவது நல்லது.

அறிமுகம் போதும்னு நெனக்கறேன்.

மீண்டும் சந்திப்போம் நண்பர்களே.

தசாவதாரம் பாடல் அலசல்...  

நானும் அலச போகிறேன் சினிமாவையும் அதன் பாடல்களையும் கால் மேல் கால் போட்டு ஒக்காந்து .... மொதல்ல தசாவதாரம் இசை அலசல் இங்கே. பாட்ட கேட்டு பாத்துட்டு நீங்களும் நான்சொல்றது ஒரு 75% சரியா இருக்குன்னு உங்களுக்கு தோணினா எனக்கு வெற்றி தான். அப்போ தான் எனக்கும் காது நல்ல கேக்குதுன்னு அர்த்தம். ஆகவே நண்பர்களே படிங்க பாட்ட கேளுங்க, கருத்த சொல்லுங்க....

அதுக்கு மொதல்ல இசை அமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மையா பத்தி கொஞ்சம் பாப்போம், இவரோட செல்ல பேரு மூக்கு பாடகர் அல்லது நாசி பாடகர். இவரோட எல்லா ஹிந்தி பாடல்களும் பெரிய ஹிட். இப்போ ஹீரோவாகவும் மக்களை குஷி படுத்துகிறார். ஹிந்தி படங்களில் வரும் pub டான்ஸ் பாடல்களுக்கு இசை அமைப்பதில் இவர் கில்லாடி. தமிழ்ல இவரு எப்படி சாதிக்க போராருன்னு போக போக தெரியும். கொஞ்சம் சந்தேகம்தான். பாப்போம்.

முதல் பாடல், முகுந்தா முகுந்தா........
வாலி பின்னி எடுத்துட்டார், ஆனா என்ன கொஞ்சம் சாமி பாட்டு மாதிரி இருக்கு ரொம்பவே... இசையும் குரலும் நல்ல தேர்வு. சாதனா சர்கம் சூப்பர். கடைசில வர கீச்சு குரல் கமலோடது. நம்பவே முடியல. நல்ல முயற்சி கமல்...

ரெண்டாவது பாடல், கல்லை மட்டும் கண்டால்........
ரொம்ப அர்த்தம் உள்ள பாட்டு, வரிகள் மிக அருமை. ஹரிஹரன் குரலில் கேட்பதற்கு ரொம்ப சுகமாக உள்ளது. சில வரிகள் புரியவில்லை.

மூணாவது பாட்டு, உலக நாயகனே ........
ஆழ்வார் பேட்டை ஆண்டவா, சகலகலா வல்லவனே... மாதிரி இதுவும் துதி பாடல்.. ஆனா கேக்கற மாதிரி இருக்கு.. வினித்தின் மென்மையான குரல் நல்ல தேர்வு .. கமல் ரசிகர்களை குஷி படுத்த சேர்க்கப்பட்ட இடைச்செருகல்.

நாளாவது பாட்டு, கா கருப்பனுக்கும் .......
வைரமுத்து ஐயா எழுதினது, pub பாட்டு. இடை இடையே ஆபாசம் இருக்கும் வரிகள்ல. தீர்த்தம் கொடுன்னு ரொம்ப ஆசையா கேக்கறாங்க, அப்புறம் ட்வின் டவர் சாஞ்சாலும் இவங்க டவர் சாயாதாம். ஐயா வைரமுத்து பின்னி எடுத்துடீங்க. பாமரனுக்கும் புரியும் இந்த பாட்டின் சில வரிகள், இந்த வரிகளுக்கு உண்மையான அர்த்தத்தை எண்ணி ரசிகர்கள் சந்தோஷத்தில் திளைப்பார்கள் என்பது வைரமுத்துவின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

அஞ்சாவது பாட்டு, ஒ.. சனம் ......
நல்லா இருக்கு கேக்கற மாதிரி, வரிகளும் இசையும் பொருந்தி போகுது. 'கடவுளும் கந்தசாமியும் பேசிக்கொள்ளும் மொழி பாடல்தான்' அப்படிங்கற வரி அருமை...

மொத்தத்துல பரவால. மூணு பாட்டு கேக்கற மாதிரி இருக்கு. மத்த ரெண்டும் ( கா கருப்பன்.. மற்றும் உலக நாயகனே ) சுமார் ரகம்.....

ஜாக்கி சானின் அவதாரமும், கெட்ட ஆட்டமும்...  

சமீபத்தில் என்னை கவர்ந்த சினிமா நிகழ்ச்சி தசாவதாரம் பாடல் தகட்டை ஜாக்கி சான் வெளியிட்டது தான். ஜாக்கி மாதிரி ஒரு ஸ்டார கூட்டிட்டு வரது ஒரு நல்ல வியாபார யுக்தி, மாய சினிமா உலகில் லாபம் சம்பாதிக்க இந்த மாதிரி ஆடம்பரம் எல்லாம் தேவை தான். அவர் வந்த தால படத்துக்கான visibility கொஞ்சம் ஜாஸ்தி ஆயுருச்சு. பாப்போம் படம் ஆப்பு அடிக்காம இருந்தா சரி.

ஜாக்கி சானிடம் உள்ள சில நல்ல குணங்களை விழா மேடையில் பார்த்தோம். பேப்பர் பொறுக்கியது, எப்போதும் சிரித்தது, எதுவுமே புரியாவிட்டாலும் பிரபலங்கள் வாரி வழங்கிய மொக்கை பாராட்டுக்களை ஏற்று கொண்டது அவற்றுள் சில. அவருக்கு மட்டும் ஐந்து கோடியாம் !! கமல் கடுப்பில் இருப்பதாக குமுதம் சொன்னது. Because முழு ரெண்டு வருஷ உழைப்புக்கே கமலுக்கு அவ்வளவுதான் கெடச்சுதாம் (நம்ப முடியல !) . ஜாக்கி சும்மா வந்து, ஸ்டார் ஹோட்டல் ல ஒக்காந்துட்டு, கொஞ்சம் நேரம் சிரிச்சிட்டு போனதுக்கு அஞ்சு கோடியா (take home) ? .

ஜாக்கி வரவு படத்தை ஜாக்கி போட்டு தூக்கி நிறுத்தும்கறது தயாரிப்பாளரின் நம்பிக்கை. ஆனா நல்லா கதையும், அதுக்கேத்த நிதானமான நடிப்பும், support பண்ண கூடிய இசையும், நல்ல ஒலி ஒளி பதிவும், வசனமும், தொய்வில்லாத நல்ல கத்திரி வேலையும், இவர்களை கட்டி மேய்க்க நல்ல இயக்குனரும் இருந்தால் மட்டுமே படம் ஜெய்க்கும். நடிகர்கள் வெறும் ஒரு வாரத்துக்கு வேண்டுமானால் ரசிகர்களை கூட்டிட்டு வர முடியும், after that நல்ல கதை தான் ரசிகர்களை கூட்டிட்டு வரும். சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி, ஆனா நடிகர்களுக்கு மட்டும் தான் கெடக்குது ஓவர் புகழ்ச்சி. நல்ல கதை இல்லாம யார் நடிச்சாலும் படம் ஓடாது இது கமலுக்கும் பொருந்தும்.

இந்தியன் பிரிமியர் லீக் நால தான் படம் ரிலீஸ் தள்ளி போயிருச்சாம். தயாரிப்பாளரின் கவலை நியாயம். Cheer leaders போடும் கெட்ட ஆட்டம் பார்த்தால் பல மல்லிகா செராவத் பாடல்களை பார்த்த 'திருப்தி' ரசிகன் முகத்தில்(நானும்தாங்க ரசிக்கறேன்) கிரிக்கெட் எல்லாம் ரெண்டாம் பட்சம் தான்.
கிரிக்கெட்டும் சினிமாவும் ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள். கொஞ்ச நாள்ல ரெடி கேமரா ஆக்சன் சொல்லி கிரிக்கெட் மேட்ச் ஆரம்பிக்க ஐநா சபையில் திட்டம் ரெடி என்று சுப்ரமண்யம் சுவாமி சொன்னார் (எங்கிட்ட மட்டும்). மக்களை குஷி படுத்துவது தான் T20 கிரிக்கெட்டின் கொள்கை என்று யாரோ காற்றில் சொன்னது காதில் விழுந்தது. அப்படியே கொள்கை ரீதியான கூட்டணியாக அது சினிமாவுடன் கூட்டு சேர்ந்து மக்களை குஷி படுத்து குட்டி கரணம் போடுகிறது. அக்ஷய் குமார் போட்டாரே மைதானத்தில் அது மாதிரி.

என்ன பொருத்த வரைக்கும் மெகா சீரியல் பாத்து கண்ணீர் விடும் இளகிய மனம் கொண்ட குடும்ப தலைவிகள் இந்த மாதிரி நிகழ்ச்சிகளை பார்க்க எதாவது 'மருத்துவர்' பரிந்துரை செய்யலாம்.

நண்பர்கள் சிலருக்கு கிரிக்கெட் பிடிக்காது. சச்சினும் அவர் சகாக்களும் இவ்ளோ பணம் பெற தகுதி உள்ளவர்களா என்று கேட்பார்கள் அவர்கள். அப்போதெல்லாம் நான் சினிமா பிரபலங்களின் பெயரை சொல்லி, அவர்கள் இவ்வளவு சம்பாதிக்க தகுதி உடையவர்களா என்று கேப்பேன். அப்படியே விவாதம் நடக்கும் நடக்கும் நடக்கும் முடிவே இல்லாமல். கடைசியில் எதாவது ஒரு செய்தி சேனல் போட்டு பேச்ச முடிச்சுருவோம்.

எப்படியோ நேரம் போனா சரி......... எனக்கும் என் நண்பர்களுக்கும் மக்களுக்கும்........

Tuesday, April 29, 2008

கழுகுப்பார்வை ஒரு அறிமுகம்...  

கொஞ்ச நாளாவே எனக்கு எழுதற ஆசை அதிகம் ஆயிருச்சு. காரணம் தெரியல. ஆனா எதாவது எழுதி தள்ளிட முடிவு பண்ணி blog போட்டாச்சு. இனிமே எழுத வேண்டியது தான் வேலை. கழுகுப்பார்வைன்னு ப்ளாக்குக்கு பேரு வெக்க காரணம் என்னன்னா கழுகோட பார்வை ரொம்ப கூர்மை. அதோட கண்ணிலிருந்து எதுவும் தப்ப முடியாது. அதே மாதிரி என் பார்வையையும் இந்த சமுகத்தின் மீது கூர்மையாக பதியவைக்க நான் எடுக்கும் முதல் முயற்சி இந்த ப்ளாக் தான். அதனாலதான் இந்த பேரு.

நான் எழுத முக்கிய காரணம் தமிழ் மறந்து போக கூடாது. அப்புறம் ஒரு மன நிம்மதிக்காக. எழுத உலகத்தில் எவ்வளவோ விசியம் இருக்குங்க. தின வாழ்க்கையில் நான் சந்திக்கும் மனிதர்கள், அனுபவங்கள் எல்லாத்தையும் உங்க கிட்ட ஷேர் பண்ணிக்க போறேன்.

இந்த சைட் ல நான் எனக்கு தெரிஞ்ச அரசியல், சினிமா, ஸ்டாக் மார்க்கெட், பொது விசியங்கள அலசி பார பட்சமில்லாம கருத்துக்கள சொல்ல முயற்சி பண்றேன். இதுல ஸ்டாக் மார்க்கெட் பற்றி அடிக்கடி எதாவது எழுதலாம்னு திட்டம். நான் சொல்ல போறது எல்லாமே நானா research பண்ணி கண்டுபுடிக்கல, நான் கேள்வி படர அனுபவ பட்ட விசியங்களை நீங்க ரசிக்கும்படி தருவதுதான் என்னோட நோக்கம். ரொம்ப அறுவ போடாமல் இருப்பதும் என்னுடைய இன்னொரு நோக்கம்.

Build up எல்லாம் ஓகே என்னத்த எழுதி கிழிக்க போறேன்னு கேக்கறது புரியுது. முடிஞ்ச வரைக்கும் முயற்சி பண்றேன், இந்த பொடியன் பண்ற தப்புகள நங்குன்னு தலைல கொட்டி (வலிக்காம தாங்க) திருத்தற உரிமை உங்க எல்லாருக்கும் உண்டு.

இலக்கண பிழைகள் இருந்தால் பெருமனது கொண்டு மன்னியுங்கள். கால போக்கில் சரி செய்து கொள்வேன் நிச்சயமாக.
பொறுமையா இவ்ளோ படிச்சதுக்கு மிக்க நன்றி.

இப்படிக்கு
முருகானந்தம்