Monday, September 28, 2009

நிஜ வேட்டைக்காரன் விஜய் ஆண்டனி.  

விஜய் ஆண்டனியின் ஒவ்வொரு ஆல்பமும் பிரம்மிக்க வைக்கிறது. சாருக்கு நிஜமாவே சரக்கு இருக்கு. ஹாரிஸ் ஜெயராஜ் ஒரே மாதிரி பாடல்களையும், ரஹ்மானுக்கு படங்களே இல்லாமலும் இருக்கும் இந்த நேரத்தில் விஜய் ஆண்டனி ஒவ்வொரு பாடலுக்கும் நல்ல வித்யாசம் காட்டுகிறார். இப்போதைக்கு இவர் தான் தமிழின் நம்பர்-1 இசையமைப்பாளர்.

நேற்று வேட்டைக்காரன் பாடல்களை கேட்டேன். இன்று மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.

முதல் பாடல், என் உச்சிமண்டைல சுர்ருங்குது ........
அண்ணாமலை எழுதியுள்ள பாடலை பாடியுள்ளவர்கள் கிருஷ்ணா அய்யரும் ஷோபா சேகரும். ரசிக்க வைக்கும் பாடல். மந்திரக்காரா மாய மந்திரக்காரா வரியில் ஏதோ ஒரு இனம் புரியாத சுகம்.

ரெண்டாவது பாடல், கரிகாலன் கால போல ........
கபிலன் எழுதியுள்ள பாடலை பாடியுள்ளவர்கள் சுர்ஜித்தும் சங்கீதாவும். சூப்பர் பாட்டு. தெம்மாங்கு பாடல் போல இடையிடையில் வரும் இசையும் வரிகளும் புல்லரிக்க வைக்கிறது.

மூன்றாவது பாடல், நான் அடிச்சா தாங்க மாட்டே ........
விஜயின் அறிமுக பாடல் இது. கபிலன் எழுதி ஷங்கர் மகாதேவன் பாடியுள்ளார். இந்த ஆண்டில் பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்க போகும் குத்து பாடல் இது தான். நல்லா சவுண்ட் வெச்சு கேக்கும் போது, கால்கள் தானாக ஆடுவதை தவிர்க்க முடியாது. விஜய் ரசிகர்கள் திரையரங்கில் நிச்சயம் குத்தாட்டம் போடலாம்.

நாளாவது பாடல், ஒரு சின்ன தாமரை ........
விவேகா எழுதி கிரிஷ்-உம் சுசித்ராவும் பாடியுள்ளனர். மெலடி ரகம் இது. நல்ல இனிமையான பாடல். இசையும் வரிகளும் அருமை. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.

ஐந்தாவது பாடல், புலி உறுமுது ........
கபிலன் எழுதி அனந்து மற்றும் மகேஷ் விநாயகமும் பாடியுள்ளனர். விஜய் வில்லன்களை பலி வாங்க போகும் போது வரும் பாடல் என்று யூகிக்க முடிகிறது. கேட்கும் படியாக உள்ளது.

மொத்தத்தில் அனைத்து பாடல்களும் தெளிவாக புரிகிறது மிக எளிதாக. ரசிக்கும் படியான பாடல்களை கொடுத்திருக்கும் விஜய் ஆண்டனிக்கு வாழ்த்துக்கள். குறை சொல்ல முடியாத நல்ல ஆல்பம். தாராளமாக கேளுங்கள்.

விஜய் ஆண்டனி தான் நிஜ வேட்டைக்காரன். ரசிகர்களின் மனங்களை வேட்டையாடுவார் நிச்சயமாக.

கமெண்ட்ஸ் ப்ளீஸ். பிடிச்சிருந்தா ஓட்டும் போடுங்க. நன்றி.

Sunday, September 27, 2009

2045-ல் தமிழக முதல்வர் யார் ?.  

அடுத்த வாரிசு ரெடி. ஸ்டாலினின் பேரன் இன்பநிதி இப்பொழுதே கும்பிட ட்ரைனிங் எடுத்து கொண்டிருக்கிறார். யாருக்கு தெரியும் 2045 -ல் தமிழக முதலமைச்சர் இவராக கூட இருக்கலாம். அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இன்பநிதி தலைமையில் வாண்டுகள் அணியை உருவாக்க இனமான பேராசிரியர் தலைமையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் முன்னிலையில் நேற்று அறிவாலயத்தில் நடந்த தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புகைப்படம் நன்றி : குமுதம்
கமெண்ட்ஸ் ப்ளீஸ். பிடிச்சிருந்தா ஓட்டும் போடுங்க. நன்றி.

Friday, September 18, 2009

நம்மைப்போல் ஒருவன்.  


எங்காவது எப்போதாவது வெடிகுண்டு வெடித்தால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?
எங்காவது எப்போதாவது தீவிரவாத தாக்குதலால் யாராவது மரணமடைந்தால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?
எங்காவது எப்போதாவது அநீதி நடந்ததை அறிந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
எங்காவது எப்போதாவது மத சண்டை குறித்த செய்தியை அறிந்தால் நீங்கள் என்ன எண்ணுவீர்கள்?

இந்த கேள்விக்கெல்லாம் பதிலாக உங்களிடம் ஒருவித இனம் புரியாத கோபமும் படபடப்பும் இருக்குமானால் நீங்களும் என்னைப்போல் ஒருவன், கமலும் நம்மைபோல் ஒருவன்.

தமிழ் சினிமாவின் சராசரி பார்முலாக்களை உடைத்தெறிந்த படம் உன்னைப்போல் ஒருவன். நாலு பாட்டு, ஐந்து சண்டை, ஆறு காமெடி ட்ராக், ஏழு முறை தொப்புள் என்று தமிழனை சிக்க வைத்த படங்களுக்கு மத்தியில் இந்த படத்தை சொந்த காசு போட்டு ரீமேக் செய்திருக்கும் கமலுக்கு முதலில் ஒரு சபாஷ். கமலும் மசாலா படங்கள் பல உருவாக்கியிருந்தாலும் இப்போது கமல் போகும் பாதை சரியாக மிக தெளிவாக தெரிகிறது.

கதை சுருக்கம் என்னவென்றால் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் துறை அதிகாரியான மோகன்லாலை மிரட்டி பல்வேறு குற்றங்களை செய்த பயங்கர தீவிரவாதிகளை சிறையில் இருந்து விடுவித்து அவர்களை கமல் என்ன செய்கிறார் என்பது தான். படம் 110 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் சொல்லவந்ததை நச்சென்று சொல்லியிருகிறார்கள் எந்த வித தொய்வுமின்றி.

இந்த படம் ஒரிஜினல் படத்தில் இருந்து வேறுபடுகிறது கமலால், மோகன்லாலால். இருவரும் போட்டி போட்டுகொண்டு நடித்திருக்கிறார்கள். கமல் ஒரே உடையில் ஒரே இடத்தில இருந்து பல வித உணர்ச்சிகளை கொட்டியிருக்கிறார். கமலுக்கு இணையான கம்பீரம் மோகன்லாலின் நடிப்பிலும். மோகன்லால் நிஜ போலீஸ் போலவே இருக்கிறார் சிறிது தொப்பையுடன். கமலும் ஒரு சாமானியன் போலவே இருக்கிறார் சிறிது தொப்பையுடன். காவல் அதிகாரி வேடத்தில் வரும் கணேஷ் வெங்கட்ராம் படத்துக்கு ஒருவித புத்துணர்ச்சியை கொடுக்கிறார்.

இந்த படத்தில் கலைஞரின் பங்களிப்பும் இருக்கிறது, முதலமைச்சர் பாத்திரத்தில் கலைஞர் குரல் நடித்திருக்கிறது. படத்துக்கு மிகப்பெரிய பலம் வசனங்கள் தான், இரா.முருகனுக்கு வாழ்த்துக்கள். வசனம் ஒவ்வொன்றும் நடு மண்டையில் ஆணி அடித்த உணர்வையும் வலியையும் உண்டாக்குகிறது. எல்லா வசனங்களிலும் ஒருவித கம்பீரமும் நகைச்சுவையும் கலந்தே வருகிறது.

பின்னணி இசை படத்தின் காட்சிக்கு தக்கபடி கச்சிதமாக கூடவே வருகிறது. ஆங்கில படம் பார்க்கும் உணர்வை இசையின் மூலம் வரவழைத்து விட்டார் ஸ்ருதி.

ஒளிப்பதிவு பிரம்மாண்டம், இயக்கம் கட்டுக்கோப்பு.

இது சாமானியனை பற்றிய படமாய் இருப்பினும், ஆங்கில கலப்பு அதிகம் இருப்பதால் பல சாமானியர்களுக்கு புரிவது சிரமம். மற்றபடி என்னைப்பொறுத்த வரையில் இந்த படம் தமிழ் சினிமாவின் ஒரு மைல் கல். வணிக ரீதியாகவும் கமலை கைதூக்கி விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரிஜினல் படத்தை பல முறை பார்த்தவர்கள் கூட இன்னொரு முறை தாராளமாக பார்க்கலாம், நிச்சயம் உங்கள் எதிர்பார்ப்பு வீணாகாது.